அழாமல் நீ பிறந்த நேரம்
ஒரு கணம் நாங்கள் அழுத
நேரம்
மறுகணம் நீ அழ தொடங்கினாய்
உன் அழுகை கண்டு நாங்கள்
மகிழ்ந்த
நேரம்
பத்து மாதம் தவமிருந்து -உன் தாய்
உறக்கம் தொலைத்து , ஆசைகள் மறைத்து
உனக்காக உன் நினைவில் தன் நினைவை
தொலைந்தாள்
வந்தும், நீ அவள் உறக்கம் பிடிக்கும் வேளை
பசித்ததென அலறிடுவாய்
சில நேரம் எதற்காக உன் அலறல்
என உறக்கம் தொலைத்து
கவனித்திடுவோம் உனை ..
தேடி தேடி தேர்ந்தெடுப்பேன்
உனக்கான ஓர் பெயரை
தேவதை என் வீட்டில் வந்ததென
பொய் நான் சொல்லவில்லை
எத்தனை எத்தனை வலிகள்
வெளியில் நான் பெற்றாலும்
வீடு வந்து உன் ஒரு
சிரிப்பில் மறந்து பறந்து விடுகிறதே !
கவலைகளை மறக்க செய்பவன்
இறைவன் எனில்
என் கவலைகளை தன் சிரிப்பால்
மறக்க செய்யும் உன்னை
என்ன பெயரிட்டு அழைப்பேன்
கவலைகளை மறக்க செய்யும்
மருந்து குழந்தையின் சிரிப்பை தவிர
வேறொன்றும் உண்டோ ?
ஒரு கணம் நாங்கள் அழுத
நேரம்
மறுகணம் நீ அழ தொடங்கினாய்
உன் அழுகை கண்டு நாங்கள்
மகிழ்ந்த
நேரம்
பத்து மாதம் தவமிருந்து -உன் தாய்
உறக்கம் தொலைத்து , ஆசைகள் மறைத்து
உனக்காக உன் நினைவில் தன் நினைவை
தொலைந்தாள்
வந்தும், நீ அவள் உறக்கம் பிடிக்கும் வேளை
பசித்ததென அலறிடுவாய்
சில நேரம் எதற்காக உன் அலறல்
என உறக்கம் தொலைத்து
கவனித்திடுவோம் உனை ..
தேடி தேடி தேர்ந்தெடுப்பேன்
உனக்கான ஓர் பெயரை
தேவதை என் வீட்டில் வந்ததென
பொய் நான் சொல்லவில்லை
எத்தனை எத்தனை வலிகள்
வெளியில் நான் பெற்றாலும்
வீடு வந்து உன் ஒரு
சிரிப்பில் மறந்து பறந்து விடுகிறதே !
கவலைகளை மறக்க செய்பவன்
இறைவன் எனில்
என் கவலைகளை தன் சிரிப்பால்
மறக்க செய்யும் உன்னை
என்ன பெயரிட்டு அழைப்பேன்
கவலைகளை மறக்க செய்யும்
மருந்து குழந்தையின் சிரிப்பை தவிர
வேறொன்றும் உண்டோ ?
No comments:
Post a Comment