சிறுவயதில் என்னை
பள்ளியில் சேர்க்க
ரசீது இல்லாமல்
நன்கொடை என்ற பெயரில்
வாங்கின நிர்வாகம்
ஏனென்றேன்
பதில் வந்தது அது
உயர்ந்த பள்ளி என
அரசு அலுவலகத்தில்
அப்பாவுடன் சென்றேன்
நியாயமாய் செய்ய வேண்டிய
பணி செய்ய பணம் கொடுத்தார்
ஏனென்றேன்
பதில் வந்தது அவர்
உயர்ந்த அதிகாரி என
தேர்தல் சமயம்
வீடுவீடாய்
ஓட்டுக்கு மனம் கொடுத்து
கொடுத்து கொண்டிருந்தார்
யாரென்றேன்
பதில் வந்தது அவர்
உயர்ந்த அரசியல்வாதி என
கடவுளை தரிசிக்க சென்ற
நேரம் கூட்டம் அதிகம்
பலர் அதிக பணம் கொடுத்து
வேறு வழியில் தரிசித்து வந்தனர்
ஏனென்றேன்
பதில் வந்தது அவர்
உயர்ந்த கடவுள்
எவ்வகையில் இவர்கள் உயர்ந்தவர்கள்
விடை தெரியா கேள்வியில் நான்
பள்ளியில் சேர்க்க
ரசீது இல்லாமல்
நன்கொடை என்ற பெயரில்
வாங்கின நிர்வாகம்
ஏனென்றேன்
பதில் வந்தது அது
உயர்ந்த பள்ளி என
அரசு அலுவலகத்தில்
அப்பாவுடன் சென்றேன்
நியாயமாய் செய்ய வேண்டிய
பணி செய்ய பணம் கொடுத்தார்
ஏனென்றேன்
பதில் வந்தது அவர்
உயர்ந்த அதிகாரி என
தேர்தல் சமயம்
வீடுவீடாய்
ஓட்டுக்கு மனம் கொடுத்து
கொடுத்து கொண்டிருந்தார்
யாரென்றேன்
பதில் வந்தது அவர்
உயர்ந்த அரசியல்வாதி என
கடவுளை தரிசிக்க சென்ற
நேரம் கூட்டம் அதிகம்
பலர் அதிக பணம் கொடுத்து
வேறு வழியில் தரிசித்து வந்தனர்
ஏனென்றேன்
பதில் வந்தது அவர்
உயர்ந்த கடவுள்
எவ்வகையில் இவர்கள் உயர்ந்தவர்கள்
விடை தெரியா கேள்வியில் நான்

