சிந்திக்கிறேன்
அசோகர் மரம் நாட்டார்
என பாடத்தில் படித்த
தினத்தை எண்ணி
சிந்திக்கிறேன்
வேப்பரத்தில் பேய் ஒண்ணு
நிக்குதுனு சொல்லிய பாட்டி
வெள்ளிக்கிழமை
சாமினு சொல்லி வேப்பிலையை
பறித்து வீட்டில் தோரணம் கட்டிய
தினத்தை எண்ணி
சிந்திக்கிறேன்
நண்பனோடு கல்லெறிந்து
மாங்காய் பறித்து உண்ட
தினத்தை எண்ணி
சிந்திக்கிறேன்
பெயர் தெரியா மரங்கள்
என் சாலைகளில்
நிழல் தர என வளர்த்த
என் முன்னோர்கள் இருந்த
தினத்தை எண்ணி
சிந்திக்கிறேன்
அரசமரம், வேப்பமரம் , ஆலமரம்
எல்லாம் என் வாழ்வோடு
கலந்திருந்த
தினத்தை எண்ணி
சிந்திக்கிறேன்
மழை பெய்ய
சாலையோர மரத்தின் அடியில்
ஒதுங்கிய
தினத்தை எண்ணி
சிந்திக்கிறேன்
வேறுகிரகத்தில் தண்ணீர்
தேடும் நம் விஞ்ஞானிகளின்
அறிவை எண்ணி
சிந்திக்கிறேன்
நீர் தேங்க அமைத்த
குளத்தையும் ,ஏரிகளையும்
பல அடுக்குமாடி வீடு கட்ட
அனுமதித்த அதிகாரிகளின்
அக்கறை எண்ணி
சிந்திக்கிறேன்
அதிகப்படியான நீர்
இருந்தும் அடுத்த மாநிலத்திற்கு
தர யோசிக்கும்
அரசியல்வாதிகளின்
நிலை எண்ணி
வீட்டின் அருகில் இருந்த
மரங்கள் எல்லாம் வெட்டி
வீட்டினுள் அழகுக்காய்
பொன்சாய் மரம் வளர்க்கும்
நம் மக்களின்
சமூக அக்கறை எண்ணி
சிந்தித்து சிந்தித்து
என் நாவறண்டு
போனதால்
என்னருகில் இருந்த
குவளையை
கவிழ்க்க
மீதி இருந்த கடைசி சொட்டு
தண்ணீர்
என் தாகத்தை
தனித்திடுமோ
என சிந்திக்கிறேன்
அசோகர் மரம் நாட்டார்
என பாடத்தில் படித்த
தினத்தை எண்ணி
சிந்திக்கிறேன்
வேப்பரத்தில் பேய் ஒண்ணு
நிக்குதுனு சொல்லிய பாட்டி
வெள்ளிக்கிழமை
சாமினு சொல்லி வேப்பிலையை
பறித்து வீட்டில் தோரணம் கட்டிய
தினத்தை எண்ணி
சிந்திக்கிறேன்
நண்பனோடு கல்லெறிந்து
மாங்காய் பறித்து உண்ட
தினத்தை எண்ணி
சிந்திக்கிறேன்
பெயர் தெரியா மரங்கள்
என் சாலைகளில்
நிழல் தர என வளர்த்த
என் முன்னோர்கள் இருந்த
தினத்தை எண்ணி
சிந்திக்கிறேன்
அரசமரம், வேப்பமரம் , ஆலமரம்
எல்லாம் என் வாழ்வோடு
கலந்திருந்த
தினத்தை எண்ணி
சிந்திக்கிறேன்
மழை பெய்ய
சாலையோர மரத்தின் அடியில்
ஒதுங்கிய
தினத்தை எண்ணி
சிந்திக்கிறேன்
வேறுகிரகத்தில் தண்ணீர்
தேடும் நம் விஞ்ஞானிகளின்
அறிவை எண்ணி
சிந்திக்கிறேன்
நீர் தேங்க அமைத்த
குளத்தையும் ,ஏரிகளையும்
பல அடுக்குமாடி வீடு கட்ட
அனுமதித்த அதிகாரிகளின்
அக்கறை எண்ணி
சிந்திக்கிறேன்
அதிகப்படியான நீர்
இருந்தும் அடுத்த மாநிலத்திற்கு
தர யோசிக்கும்
அரசியல்வாதிகளின்
நிலை எண்ணி
வீட்டின் அருகில் இருந்த
மரங்கள் எல்லாம் வெட்டி
வீட்டினுள் அழகுக்காய்
பொன்சாய் மரம் வளர்க்கும்
நம் மக்களின்
சமூக அக்கறை எண்ணி
சிந்தித்து சிந்தித்து
என் நாவறண்டு
போனதால்
என்னருகில் இருந்த
குவளையை
கவிழ்க்க
மீதி இருந்த கடைசி சொட்டு
தண்ணீர்
என் தாகத்தை
தனித்திடுமோ
என சிந்திக்கிறேன்
No comments:
Post a Comment