Saturday, March 10, 2018

அணைத்துக்கொள்

என்ன சொல்ல
பழகினால் பிரிந்திடுவாய் ஒருநாள்
என தெரிந்தும் பழகினேன்

பிரிந்தால் அவ்வலி
மரணம் போல் இருக்கும்
என நினைத்திருக்கவில்லை

ஒரு கனம்
நினைத்திருந்தால்
மரணத்திருப்பேன்
விழிமூடி
வலித்திருக்காது

நேசித்தவர் ஏற்படுத்தும்
வலி போல் எதிரி கூட நமக்கு
தரமுடியாது
அது என் எதிரிக்கும் வர கூடாது

பிழைத்திருக்கிறேன்
என்னை பெற்ற
தாய் தந்தைக்காக
என்னை பிரியும் வலி
அவர்களுக்கு கொடுக்க
விரும்பவில்லை நான்

மரணம் அவர்களை
நெருங்கும் நேரம்
காலா, என்னையும்
அணைத்துக்கொள்

காத்திருக்கிறேன்

No comments: