Saturday, March 17, 2018

அன்பு தோழி நியா !!!

நமக்கான உரையாடலில் 
முதலில் பேசியது 
நீயே !

நண்பனாய் எனை கண்டு 
மின்னஞ்சல் அனுப்பி
என்னை மகிழ்ச்சியில் 
ஆழ்த்தியது 
நீயே !

நிதர்சனம் உன் கவிதை 
வரிகளாக்கி  எழுதுபவள் 
நீயே !

குயில்களும் வெட்கம் 
கொள்ளும் குரலில் 
நிகழ்ச்சியை நடத்துபவள் 
நீயே !

பட்டிமன்றத்தில் 
உன் பேச்சால் 
எங்களை ஆச்சர்யப்படுத்துபவள் 
நீயே !

அன்பென்ற மாலையில் 
கோர்த்த முத்தொன்று 
உதிர்ந்ததெண்ணி 
கோர்த்துவைத்த மற்ற முத்துக்கள் 
சிதறுமோ என அஞ்சுபவள் 
நீயே !

பல திறமை உனக்குண்டு 
பல நட்புக்களும் இங்கு உனக்குண்டு

உன் நட்பெனும் மாலையில் 
உதிராத நட்பாய் என்றும் 
நானுண்டு என் 
அன்பு தோழி நியா !!!

No comments: