துப்பாக்கி முனைகள்
என்னை நோக்கி
பிடித்திருக்கும்
இவர்கள் யார் ?
வானத்திலிருந்து
இறங்கும் பலூன்கள் போல்
குண்டுகளை இறக்கும்
இவர்கள் யார் ?
நேற்றுவரை என்னை
பாலூட்டி வளர்த்த
தாயையும்
என்னை நெஞ்சுக்குள்
அணைத்து கொஞ்சிய
என்ன தந்தையையும்
நான் சிரிப்பதை கண்டு
ஆனந்தம் கொண்ட
என் சகோதரனையும்
கொன்ற
இவர்கள் யார் ?
சொந்த நாட்டிலே
இந்த நிலை எனில்
உயிரை கையிலேந்தி
அகதியாய் அந்நிய நாட்டில்
கரையேறிய என் சொந்தங்களின்
நிலை பற்றி எண்ணாத
இவர்கள் யார் ?
மனித வளத்தை விட
எண்ணெய் வளத்தை
உயர்வென நினைக்கும்
இவர்கள் யார் ?
நிச்சயம் மனிதர்கள்
அல்ல
பசிக்காக வேட்டையாடும்
மிருகமும் அல்ல
இவர்கள் யார் ?

No comments:
Post a Comment