என் இதயத்தில் இருக்கும் அவளை
தேடுவதும் ஒரு சுகம் தான்
ஆனால் அந்த சுகம் இப்போது இல்லை
என்ன ஆயிற்று அவளுக்கு மனம்
கேள்விகள் ஆயிரம் மனதில் இருந்தும்
பதில் ஒன்றும் வர மறுக்கிறது
அழைப்பான் அழுதிக்கொண்டிருக்கிறேன்
என்னை மனம் போல் அதுவும் கதறுகிறது
சில நிமிட நேரம் கடந்து நிறுத்தினேன்
அவள் அறை தோழியுடன் சென்றிருப்பாள்
என நினைத்து என் அறை திரும்ப எத்தனிக்கையில்
கதவு மெல்ல திறந்தது
அவளை கண்டதும் என் மனம் உறைந்தது
திக்பிரம்மை பிடித்தது போல் ஆனேன்
காரணம் அவள் நின்ற தோற்றம்
தலைவிரித்தபடி காலையில் உடுத்தியிருந்த
அதே உடை தான் - பொலிவிழந்து
நிலவை சூழ்ந்த கார்மேகம் போல முகம்
கண்ணீர் வற்றி காய்ந்து போன கன்னங்கள்
பாதி விழித்த கண்கள்
சில நேரம் சென்று தன்னிலை உணர்ந்து
கேட்டேன் அவளிடம் என்ன ஆயிற்று ?
மின்விளக்கை எரிய செய்து வீட்டினுள்
அழைத்தாள் அவளின் பின் சென்றேன்
நாற்காலியில் அமர்ந்தேன் மௌனம் மட்டும்
அவளிடம் இருந்து ..
மீண்டும் கேட்டேன் என்ன ஆயிற்று உனக்கு
ஏன் இந்த கோலம் சொல் என்றேன்
வாய் திறந்தாள் .துக்கம் தொண்டையை
அடைத்தது கண்ணீர் வற்றியதால் எட்டி கூட
பார்க்கவில்லை கண்களில்
புதிய இடம் வந்ததும் அறையில் யாரும் இல்லை
"ஒரு வாய் சாப்பிடு" என்று சொல்ல கூட அம்மா இல்லை
செல்ல சண்டை இட என் சகோதரி இல்லை
என்னூடன் விளையாட அவள் குழந்தை இல்லை
என்னை பார்த்து கொள்ள யாரும் இல்லை
அனாதை போல் உணர்ந்தேன் ஒரு கணம்
துக்கம் என்னை அணைத்து கொண்டது
கண்ணீர் நான் இருக்கிறேன் என ஆறுதல் சொல்ல
என் கன்னங்களுடே வழிந்தோடியது
பசி என்னை ஆட்கொண்டது
உறக்கம் என்னை வென்று விட்டது
எப்போது உறங்கினேன் தெரியவில்லை
அழைப்பு மணி கேட்டு உணர்ந்தேன் என்றாள்
அடி பைத்தியக்காரி என்னை தொலைபேசியில்
அழைத்திருக்கலாமே என்றேன் !
அவளிடமிருந்து பதில் இல்லை
ஆம் நான் யார்? யோசித்தேன்
அவள் சொன்ன உறவுகளில் நான் இல்லையே !
பின் எப்படி நினைத்து அழைப்பாள் என்னை ..?
எதுவாயினும் அவள் என் தோழி ஆயிற்றே
முகம் கழுவி புறப்பட்டு வா
நாம் வெளியில் சென்று சாப்பிட்டு வரலாம் என்றேன்
வெளியில் வந்து கதவு பூட்டி நடந்தோம்
தெருவில் இரு நிலா என்னுடன்
ஒன்று வானத்தில் இன்னொன்று
என் அருகில் என்னுடன்
----பயணம் தொடரும் ---
தேடுவதும் ஒரு சுகம் தான்
ஆனால் அந்த சுகம் இப்போது இல்லை
என்ன ஆயிற்று அவளுக்கு மனம்
கேள்விகள் ஆயிரம் மனதில் இருந்தும்
பதில் ஒன்றும் வர மறுக்கிறது
அழைப்பான் அழுதிக்கொண்டிருக்கிறேன்
என்னை மனம் போல் அதுவும் கதறுகிறது
சில நிமிட நேரம் கடந்து நிறுத்தினேன்
அவள் அறை தோழியுடன் சென்றிருப்பாள்
என நினைத்து என் அறை திரும்ப எத்தனிக்கையில்
கதவு மெல்ல திறந்தது
அவளை கண்டதும் என் மனம் உறைந்தது
திக்பிரம்மை பிடித்தது போல் ஆனேன்
காரணம் அவள் நின்ற தோற்றம்
தலைவிரித்தபடி காலையில் உடுத்தியிருந்த
அதே உடை தான் - பொலிவிழந்து
நிலவை சூழ்ந்த கார்மேகம் போல முகம்
கண்ணீர் வற்றி காய்ந்து போன கன்னங்கள்
பாதி விழித்த கண்கள்
சில நேரம் சென்று தன்னிலை உணர்ந்து
கேட்டேன் அவளிடம் என்ன ஆயிற்று ?
மின்விளக்கை எரிய செய்து வீட்டினுள்
அழைத்தாள் அவளின் பின் சென்றேன்
நாற்காலியில் அமர்ந்தேன் மௌனம் மட்டும்
அவளிடம் இருந்து ..
மீண்டும் கேட்டேன் என்ன ஆயிற்று உனக்கு
ஏன் இந்த கோலம் சொல் என்றேன்
வாய் திறந்தாள் .துக்கம் தொண்டையை
அடைத்தது கண்ணீர் வற்றியதால் எட்டி கூட
பார்க்கவில்லை கண்களில்
புதிய இடம் வந்ததும் அறையில் யாரும் இல்லை
"ஒரு வாய் சாப்பிடு" என்று சொல்ல கூட அம்மா இல்லை
செல்ல சண்டை இட என் சகோதரி இல்லை
என்னூடன் விளையாட அவள் குழந்தை இல்லை
என்னை பார்த்து கொள்ள யாரும் இல்லை
அனாதை போல் உணர்ந்தேன் ஒரு கணம்
துக்கம் என்னை அணைத்து கொண்டது
கண்ணீர் நான் இருக்கிறேன் என ஆறுதல் சொல்ல
என் கன்னங்களுடே வழிந்தோடியது
பசி என்னை ஆட்கொண்டது
உறக்கம் என்னை வென்று விட்டது
எப்போது உறங்கினேன் தெரியவில்லை
அழைப்பு மணி கேட்டு உணர்ந்தேன் என்றாள்
அடி பைத்தியக்காரி என்னை தொலைபேசியில்
அழைத்திருக்கலாமே என்றேன் !
அவளிடமிருந்து பதில் இல்லை
ஆம் நான் யார்? யோசித்தேன்
அவள் சொன்ன உறவுகளில் நான் இல்லையே !
பின் எப்படி நினைத்து அழைப்பாள் என்னை ..?
எதுவாயினும் அவள் என் தோழி ஆயிற்றே
முகம் கழுவி புறப்பட்டு வா
நாம் வெளியில் சென்று சாப்பிட்டு வரலாம் என்றேன்
வெளியில் வந்து கதவு பூட்டி நடந்தோம்
தெருவில் இரு நிலா என்னுடன்
ஒன்று வானத்தில் இன்னொன்று
என் அருகில் என்னுடன்
----பயணம் தொடரும் ---