Saturday, May 27, 2017

யார் இவள் -5

பயணசீட்டை  அவள்
கொண்டு வந்த உடைமைகள்
அனைத்திலும் தேடினாள்
 தன்  உடன்பிறந்தவன்
தன்னுடன்  கொண்டு சென்றதை
அறியாத பேதை

குடும்பத்தை பிரிந்தபோது
விழியோரம் எட்டி நின்ற
கண்ணீர் இப்போது அவள்
கண்ணங்களூடே பயணத்தை
தொடர்ந்தது

என் மனது கனத்தது
இரு பரிசோதகரிடம் பேசுவோம்
என்று சொல்லி அவரிடம் சென்றேன்

எங்களது நிலையை சொன்னேன்
முதலில் மறுத்த அவர் பின்
என்னையும் அவளையும்
மாறி மாறி பார்த்தார்
என்ன நினைத்தாரோ
மனம் மாறி சம்மதித்தார்

மீண்டும் ஒரு கேள்வி எழுப்பினார்
ரயில் நிலையத்தின் பரிசோதகரிடம்
என்ன சொல்வீர் என ?

விழிபிதுங்கி நின்ற வேளை
ஒரு சீட்டில் எழுதி
கையொப்பமிட்டார்
இதை வைத்துகொள் என

இறைவன் இருப்பதாய் நம்பும்
நான் இன்று அவர் உருவில் கண்டேன்

விஷயத்தை அவளிடம் சொல்ல
பிறையில் வளரும் நிலவு போல் 
அவள் மெல்ல புன்னகைத்தாள் 


அந்த பயணத்தில்
என்ன பேசினோம் நினைவில்லை
எண்ணத்தால் உன்னை தொடர்ந்தேன்
ஒரு கொடி போல் நெஞ்சில் படர்ந்தேன்

இந்தஅனுபவம் தனிஒருவிதம் 

மலரும் வளரும் பல நாள் தொடரும்


தொடரும்


No comments: