Thursday, May 25, 2017

யார் அவள் -3

காலங்கள் காயங்கள்
ஆற்றும் என்று நம்பி
வாழ்வது தானே வாழ்க்கை
அதற்கு நானும் தப்பவில்லை

நாட்கள்உருண்டோடின
அவள் கண்கள் என் கண்களை
சந்திப்பதில் இருந்தும்  தப்பியோடின

உச்சி வெயிலில் நடந்து வந்தவனுக்கு
பானையில் பிடித்த மோர் கொடுத்தால்
குளிரும் மனம் போல் உணர்ந்தேன்

ஆம்,
அவள் என்னை நோக்கி  வந்துகொண்டிருந்தாள்
ஆனால்
வந்தவள் கொண்டுவந்தது விஷம் என அறியாமல்

மேலதிகாரி அழைப்பதாய்  சொன்னாள்
அவரிடம் சென்றோம் -என்னை
பெங்களூருக்கு மாற்றுவதாய் உத்தரவு

அவள் முகத்தில் மகிழ்ச்சி புன்முறுவல் பூத்தாள்
என் முகமோ வாடிய மலர் போல் ஆயின

இறைவன் இருப்பதாய் என்றும் நம்பும் நான்
இன்று இல்லை என்று நிந்தித்த வேளை -
மேலதிகாரியின் அடுத்த உத்தரவு என்னுடன் பயணிக்க
மணிமேகலையும் வருவாள் என -

மலர்ந்த அவள் முகம் சுருங்ககண்டு கண்டுகொண்டேன்
அவள் பெயர் மணிமேகலை 


மணிமேகலையுடன் பயணம் தொடரும் 

No comments: