Saturday, May 6, 2017

பயமாய் தான் இருக்கிறது


பயமாய் தான் இருக்கிறது

ரோட்டில் பிச்சை எடுக்கும்
பிச்சை காரியிடம் இல்லை
என சொல்கையில்

பயமாய் தான் இருக்கிறது

சுயநலமான நண்பனுடன்
பயணிக்கையில்

பயமாய் தான் இருக்கிறது

நிலவு போல் அவள் இருக்க
நிலவின் நிழல் போல இருக்கும்
நான் காதல் சொல்கையில்

பயமாய் தான் இருக்கிறது

நான் இல்லாமல் நீ இருப்பாய் -ஆனால்
நீஇல்லா நாட்களில் நான் வாழ்வதை எண்ணி

பயமாய் தான் இருக்கிறது

புதிதாக யாரேனும் பாசமாக
பேசுகையில்

பயமாய் தான் இருக்கிறது

நேசத்திற்காக நான் பழக
தேவைக்காக

பயமாய் தான் இருக்கிறது

ஏமாற்றுவதாய் நினைப்பவர்கள் முன்
ஏமாறுவதாய் நடிக்கையில்

பயமாய் தான் இருக்கிறது

கவிதை என்று எழுதியதை
நம்பி படிக்கும் உங்களை
எண்ணி



No comments: