Tuesday, May 23, 2017

யார் இவள்

பொழுது விடிந்தது என
கூவியது சேவல்
அவளை காண
மனதில் ஆவல்

மேற்பார்வையாளர் வேலை
அலுவலில் மூழ்கினேன்
ஒருவர் சமர்ப்பித்த அறிக்கையில்
"தவறு கண்டேன் "


ஆம் "கண்டேன் " தவறாய்
அவள் பார்வையில் நான்

மேலதிகாரியின் கண்டனத்தில்
அவள்- அதற்கு காரணம் நான் என
அவள் விழி சுட்டது என்னை

மேலதிகாரியின் பார்வையில்
ஒரு பெருமிதம்
அவள் பார்வையில் வெறும்
கசக்கி போட்ட காகிதம்
நான்

தோழன் என கண்ட கண்கள்
ஓர் இரவில்
எதிரியாய் கண்டன

அன்றைய பொழுது உணவு 
இறங்கவில்லை இருவருக்கும் 


அவளின் முன்முறுவல்
கானல் நீராய் ஆயின

மாறி போன பாதையில்
வழி தெரியாமல் நிற்கும்
வழிப்போக்கனாய் நான்


-----பயணம் தொடரும் ---

No comments: