Monday, December 14, 2020

பசி

 


சிக்கிய மனம்


உன்னிடம்

சிக்கிக்கொண்டது "பென்" மட்டுமல்ல "பெண்ணே" என் மனமும் தான் உன்னிடம் கடி வாங்கி சிக்கி சிக்கி எழுதுவது பென் மட்டுமல்ல பெண்ணே உன்னிடம் காதல் சொல்ல வந்த என் வார்த்தைகளும் திக்கி சிக்கி கொள்கிறது எனக்குள்

Thursday, November 26, 2020

காத்திருக்கிறேன்

 இன்னொருமுறை 

நாம் சந்தித்துக்கொள்வோமென்றோ 


இன்னொருமுறை 

பரஸ்பரம் அன்பை 

பரிமாறிக்கொள்வோமென்றோ 


இன்னொருமுறை 

வெட்க புன்னகை 

எனக்குள் கடத்துவாயென்றோ 


இன்னொருமுறை 

செல்ல செல்ல 

சண்டகையிட்டுக்கொள்வோமென்றோ 


இன்னொருமுறை 

உன் தோள்  சாய்ந்து 

ஆறுதல் அடைவேனென்றோ 


இன்னொருமுறை 

சிறிதாய் மட்டும் நமக்குள் 

மௌனங்கள் 

கடந்திடுமென்றோ


இன்னொருமுறை 

உன் வருகைக்காக 

காத்திருக்கிறேன் 

Monday, November 2, 2020

தீபாவளி வருகிறது 


அம்மாவிடம் சொல்லி 

பலகாரம் சில செய்ய

சொல்ல வேண்டும் 


அப்பாவிடம் சொல்லி 

புது துணிமணி 

வாங்க சொல்விட வேண்டும் 


அண்ணாவிடம்  சொல்லி 

வெடிக்கும் பட்டாசு கொஞ்சம் 

வாங்க சொல்லிட வேண்டும் 


தங்கையிடம் சொல்லி 

பாட்டு ஒன்னு பாட 

அதை நாங்கள் ஒன்றாய் அமர்ந்து 

கேட்டு ரசித்திட வேண்டும் 


வர்ண பகவானிடம் சொல்லி 

அன்று ஒரு நாள் மட்டும் 

மழை வேண்டாமென 

கேட்டிட வேண்டும் 


நண்பர்களிடம் சொல்லி 

ஓரிடம் சேர்ந்து 

பேசி கழித்திட வேண்டும் 


கடவுளிடம் சொல்லி 

இக்கனவு 

மெய்ப்பட தினம் 

பிரார்த்தித்திட வேண்டும்   

Tuesday, October 20, 2020

 காலையில் கண்விழிக்கும் நேரம் 

கண் தேடுகிறது 

அருகில் உன்னை 

காண 


நடக்கையிலும் 

உன்னை பார்த்தபடி 

நடக்கவே மனம் 

விரும்புகிறது 


எங்கு பயணிக்கையிலும் 

உன்னுடன் பயணிக்கவே 

விரும்புகிறது 

மனம் 


விடை தெரியா 

கேள்விக்கெல்லாம் 

விடையாய் என்முன் 

நீயே 


நீ அருகில் இல்லா 

நாட்கள் 

நிலா இல்லா வானம் போல 

இருண்டு விடுவதாய் 

உணர்கிறேன் 


நீ என்ன என் காதலியா 

இல்லை 

நீ அதற்கும் மேல் 

என் செல்ல 

தொலைபேசியே 


விசித்திரம் நிறைந்த 
இவ்வுலகத்தில் 
விசித்திரமான
மக்கள் சிலர் 

வறுமை கோட்டுக்கு 
கீழ் உள்ள மக்கள் என்று 
சொல்லி கோடு கிழித்து 
கோடு தாண்டாமல் 
பார்த்து கொள்கிறார்கள் 
சிலர் 

பணம்,ஜாதி , இனம் 
என மனிதனை பிரித்து 
ஒதுக்கி  விடுகிறார்கள் 
சிலர் 

ஆள் பலம் , பண பலம் 
என்று அதிகாரத்தை 
கையில் எடுத்துக்கொள்கிறார்கள் 
சிலர் 

அதிகாரம் எப்படி 
செயல்பட வேண்டும் என 
தேர்தல் நெருங்கும் நேரம் மட்டும் 
மக்களுக்கு உணர்த்தும் 
சிலர் 

அறிவிக்க படும்
நலத்திட்டங்களெல்லாம் 
ஊடகத்தில் மட்டும் பரவுவதை 
கொண்டாடும் 
சிலர் 

5 நொடிகள் 
உங்கள் கால்களில் விழுந்தும் 
கைகூப்பயும் ஒட்டு கேட்டு 
5 வருடங்கள் 
உங்களை ஊனத்தோடு 
உலவ விடும் அரசியல்வாதிகள் என்று 
சிலர் 

ஈன செயலுடன் 
தவறு செய்பவன் 
எந்த நடிகனின் ரசிகன் என்றும் 
எந்த கட்சியின் தொண்டன் என்றும் 
ஊடகத்தில் விவாதமாக்கி 
அவன் மனிதனல்ல 
என்ற ஒன்றை மறந்து,மறைத்து 
அடுத்த பிரச்சனைக்கு தாவும் 
நடுநிலையை நிலை நாட்ட
போராடும் ஊடக துரோகிகள் 
சிலர் 

இது ஏதும் அறியாமல் 
ராமன் ஆண்டாளும்
இராவணன் ஆண்டாளும் 
எனக்கு கவலையில்லை 
என் கவலையே எனக்கு போதும் 
என முக்காடு இட்டுக்கொள்ளும் 
சிலர் 

அடக்குமுறை கண்டு 
காந்தியும், காமராசரும், பெரியாரும் 
அவ்வப்போது உருவாகிறார்கள் 
நம்மிலிருந்து 
சிலர் 

நாடு முன்னேற 
நமக்கு இன்னும் 
வேண்டும் இவர்களை போல 
சிலர் 

Wednesday, October 14, 2020




 சுறுசுறுப்பாய்

லட்சியம் நோக்கி
பயணிக்கையில்
உச்சம் தொடலாம்
என உணர்த்தும்
"எறும்பு"

 


தண்ணீர் ஊற்றி
குளிப்பாட்டுக்கையில்
குளிர்ந்திடும்
குழந்தை

குழந்தையின்
ஒற்றை
முத்தத்தில்
குளிர்ந்திடும்
தாய் 


Tuesday, October 13, 2020

தாய்

தாய் 

கண்கொண்டு 
பார்க்கவில்லை 
நேசித்தாள் 

கவலையின்றி 
வாழ 
சுவாசித்தாள் 

வார்த்தைகள் 
ஏதுமில்லாமல் 
அன்பை கடத்தினாள் 

விறல் பிடித்து 
நடக்காமல் 
பாதை காட்டினாள் 

கருவாக உருவான -என் 
உருவத்தை காண 
விஞ்ஞான துணையின்றி 
வலியினூடே 
என்னை பிரசவித்தாள் 

Monday, October 12, 2020

ஒரு விதி செய்வோம்

 போர்க்களத்திலே

எதிரிகள் சூழ்ந்திருக்க 

நெஞ்சிலே வீரம் கொண்டு 

கையில் வாளும், வில்லும் அம்பும் ,

ஈட்டியும் ஏந்தி 

பகைவர்களின் தலைகளை 

பகடைகளாய் வீழ்த்தி 

நிமிர்ந்து நின்ற 

என் குல பெண்கள்


சினமுற்றாள்  

விரட்டினாள் 

புலியை கூட

முறத்தால் 

என் வீர தமிழ்பெண் 

அன்று 

 

இன்று 

கையில் வாளும் இல்லை 

ஈட்டியும் இல்லை 

எதிரிகள் மட்டும் 

கண்முன்னே

பற்பல 

முகங்களில் 

உன்னை சூழ்ந்து 

நடமாடிக்கொண்டிருக்கிறார்கள் 


கள்ளிப்பால் முதல் 

கணினி வரை 

உன்னை வீழ்த்த 

திட்டங்கள் தான் 

எத்தனை எத்தனை ..


சிலருக்கு 

வாழ்க்கையில் 

போராட்டம் 

உனக்கோ 

வாழ்க்கையே 

போராட்டமாய்


பாரத மாதா 

பூமி தாய் 

தமிழ் தாய் 

காவேரி,கங்கை என 

பெண்ணை போற்றி வணங்கி 

புத்தகத்தில் புதைத்துவிட்டோம்  


நீதி தேவதையின் 

கண்ணை கட்டிவிட்டோம் 

கயவர்கள் தப்பித்து 

எழுத கூட கூசும் 

ஈன செயலை செய்தவனுக்கு 

தையல் இயந்திரம் வாங்கவா?


பெண்ணே 

நிமிர்ந்து நின்று 

எதிரிகளை வீழ்த்த 

சினம் கொண்டு 

எழுந்து வா 


பெண்ணே 

உனக்காய் 

ஒரு விதி செய்வோம்  

Sunday, August 23, 2020

குழந்தையின் குமுறல்

பத்து மாதம் தான் 

என்னையும் சுமந்து 

பெற்றிருக்க வேண்டும் 

நீ 

 

எல்லா பிள்ளையும் போல 

உன் வயற்றில் உதைத்து 

விளையாடிருக்க வேண்டும் 

நான் 


எல்லா தாயையும் போல 

எனக்காய் உன் ஆசைகளை 

தியாகம் செய்து 

உண்ணும்போதும் உறங்கும்போதும் 

எனக்காய் சிந்தித்து 

என்னை வலியினூடே 

பிரசவித்திருக்க வேண்டும்

நீ 


பிறந்த நாடு முக்கியம் 

என்றுணர்ந்த நீ 

பெற்ற  பிள்ளைக்கு 

உன் பாசம் முக்கியம் 

என்று உணர 

தவறியதேனோ ?


தோள் கொடுப்பான் 

தோழன் சரி தான் 

பெற்ற தாயின் பாசம் 

தர இயலுமோ 

என் யோசித்தாயா 

நீ? 


குழந்தையின் அன்பை உதறி 

நீங்கள் சொல்லும் காரணங்கள் 

எல்லாம் ரணங்களுக்கு 

மருந்தாகாது 


உறவுகளுக்குள் 

சுவர் எழுப்பி 

இறகுகளை உதிர்த்து 

பறக்க சொல்லுகிறீர்கள் 

என்னை 

பறந்திடத்தான் 

இயலுமோ ?


உங்களை நினைத்து 

பீறிட்டு வரும் 

என் அழுகையின்  சத்தம் 

குண்டுகள் தாங்கி பறந்து வரும் 

போர் விமானத்தை விட 

பேரிறைச்சல் கொண்டது 

என அறிவாயா

 நீ?


குற்றமே செய்யாத 

எனக்கு ஏன் 

வாழ்வதே தண்டனையாய் 

தந்தாய் 

நீ ?



Monday, August 10, 2020

கிறுக்கல்கள் 


"வெளிச்சத்தை கண்டு 

வரும் விட்டில்பூச்சியாய் 

உன்னை கண்டதும் 

காதல் கொண்டு வருகிறேன் 

வீட்டில் பூச்சியாய் ஆகினும் 

என்னை வைத்துக்கொள்ளேன் 

உன்னுடன் "


*******    *******    *********

"ஆறு தலை 

முருகனை காண 

வந்தேன் 

ஆறுதலாய் இருந்தது 

கண்டபின் 

உன் முகம் "


*******    *******    *********

"கதிரவன் 

உதித்துவிட்டான் 

ஊரடங்காம் 

இன்று 

எப்படி சொல்வேன் 

தடுக்க முடியாதபடி 

வந்து செல்லும் 

உன் நினைவலைகலை  பற்றி "


*******    *******    *********

என் வீட்டில் 

பால் திருடிய 

உன் வீட்டு 

பூனைக்கெல்லாம் 

கொஞ்சி முத்தம் கொடுக்கிறாய் 

என் இதயத்தை 

திருடிய உனக்கு 

என்ன தண்டனை 

கொடுக்கலாம் 

என யோசித்துக்கொண்டிருக்கிறேன் 


*******    *******    *********


உன்னை காணாத பொழுதில் 

அனலில் இட்ட புழுவாய் 

துடிக்கிறேன் 

வந்து 

உன் தாவணி தணலில் 

எனக்கு ஓர் அடைக்கலம்

தருவாய் என  

*******    *******    ******** 


 முத்தத்தின் போது 

மட்டும் சிந்தும் 

தேன் 

அவள் உதடு 

***** ***** ******

கண்ணாடி தோழன் 


 சின்னஞ்சிறு வயதில் 

முதன் முதலில் 

உன்னை பார்த்ததும் 

ஆச்சர்யம் ஆட்கொண்டது 


விளையாட்டு 

தோழனாய்  நீ 

கையால் தொட எத்தனித்தேன் 

முடியவில்லை 


நான் சிரித்தால் 

நீயும் சிரித்தாய் 

நான் அழுதால் 

நீயும் அழுதாய் 


உணர்வுகளின் 

பிரதிபலிப்பாய் 

நீ இருப்பதாய் 

காலம் எனக்கு 

உணர்த்தியது 


உன்னை காண்கையில் 

அழகாய் தெரிந்தால் 

என்னவளுக்கும் 

அழகாய் தெரிவதாய் 

உணர்ந்தேன் 


ஏமாற்றம் 

எனை  ஆட்கொள்கையில் 

உன்னிடம் தான் வந்து 

அழுவேன், 

என்னை பிரதிபலிக்கும் 

உன்னைக்காண்கையில் 

கோவம் கொப்பளிக்கும் 


எதிரில் இருக்கும் 

உன்னை அடிப்பேன் 

காயங்களும் வலிகளும் 

எனக்கு 

நிமிர்ந்து பார்க்கையில் 

என் மனதை 

போல் 

துக்கு துகளாய் 

சிதறியிருப்பாய் 


சிதறிய துகள்கள் 

ஒவ்வொன்றும் 

என்னை பிரதிபலிக்கும் 




Wednesday, August 5, 2020


தனிமை

கருவறையின் 
தனிமையை 
போக்கியது 
தொப்புள்கொடி 

சிறு வயதில் 
தனிமையை 
போக்கியது 
நட்புக்கள் 

இளமையின் 
தனிமையை 
போக்கியது 
காதல் 

முதிர் பருவத்தின் 
தனிமையை 
போக்கியது 
பிள்ளைகள் 

பயணத்தின் 
தனிமையை 
போக்கியது 
ராஜாவின் இசை 

இரவின் 
தனிமையை 
போக்கியது 
நிலவு 

இன்று 
முதுமையின் 
தனிமையை 
மரணம் தான் 
போக்கிடுமோ ?


Monday, August 3, 2020

கண்டேன்

முதன் முதலில் 
உன்னை
கண்டேன் 

உன் 
நிழலுக்கும்
குடை பிடிக்கும் 
பேதை என 
நான் மாற
கண்டேன் 

வார்த்தைகள் 
உச்சரிக்கும் 
உன் இதழ்கள் 
கண்டேன் 

போதை ஏறிய 
குரங்காய் 
என் மனம் மாறிட 
கண்டேன் 

காகிதம் கூட 
உன்னிடம் பேசும் 
ஆயுதமாக 
கண்டேன் 

படிக்க படிக்க 
வெட்கம் கூட 
என் துணை நிற்க 
கண்டேன் 

நம்மில் 
வார்த்தைகள் 
வற்றிட கண்டேன் 

கண்ணில் 
ஈரம் நிறைந்திட 
கண்டேன் 

உன் மௌனத்தின் 
நெருக்கம் 
கண்டேன் 

அது 
நம் பிரிவின்
தொடக்கமாய் 
கண்டேன்




Saturday, August 1, 2020

அம்மா 

கருவறையில் 
உருவாக ஆகும்முன் 
என்னை 
உறவாக 
கண்டவள் 
நீயே 

உலகம் காண 
உருவம் கொண்டு 
வந்ததும் 
முதல் முத்தம் 
தந்தவள் 
நீயே 

பசி என்று என் 
நான் உணருமுன் 
வாரி அணைத்து 
பாலூட்டியவள் 
நீயே 

கல்விதனை 
நான் கற்க 
கைபிடித்து 
மணலில் எழுத 
கற்று தந்தவள் 
நீயே 

பசித்திருந்தும் 
உண்ணாமல் 
நான் வர காத்திருந்து 
உணவூட்டி 
பசியாறியவள் 
நீயே 

எனக்கு அடிபட்டாலும் 
என்னை விட 
வலியில் துடிப்பது 
நீயே 

ஊரார் என்னை பற்றி 
ஏது அவதூறு சொல்லினும் 
"என் பிள்ளை" பற்றி 
எனக்கு தெரியுமென 
என் பக்கம் 
நிற்பவள் 
நீயே 

என் ரகசியம் 
அனைத்தும் 
அறிந்த 
என் முதல் தோழி 
நீயே 

எத்தனை பிறவி 
எடுப்பினும் 
வேண்டும் 
என் தாயாய் 
நீயே 





Friday, May 15, 2020

குயில்போல நீ !















குயில்போல நீ !


தொலைத்த உறவை
எண்ணி
பாடிக்கொண்டே
இருக்குமாம்
குயில்
உன்னை போல

ஆனால்
கேட்பவருக்கு
மகிழ்வை தரும்
குயில் பாட்டும்
உன் பேச்சும்

சோகம் கூட
சுகமாகலாம்
சிலருக்கு
கற்றுக்கொண்டேன்
உன்னிடமிருந்து

தொலைத்த உறவை
எண்ணி
புதிதாய்
பிறந்த
உறவுகளை
ஒட்டாமல் தவிர்க்கிறாய்

குயில் பாட்டு
பிடிக்காதவறில்லை
உன்னையும்
பிடிக்காதவறில்லை
இவ்வுலகில்