Friday, December 15, 2017

காதல் ..

உலகமறியா வயதில்
உலகமாய் இருந்த
தாயின் மேல்
காதல்

தவிழ தொடங்கியதும்
காணும் பொருளின்மேல் எல்லாம்
காதல்

நடக்க தொடங்கியதும் 
எட்டும் பொருளுக்கெல்லாம் 
காதல் 

பள்ளி பருவத்தில் 
பென்சில் தந்த பள்ளித்தோழியின் மேல் 
காதல் 

விடலை பருவத்தில்
விளையாட்டாய் 
காதல் 

கல்லூரி வாழ்க்கையில் 
கானால் நீராய் ஒரு 
காதல் 

வேலைக்கு  சேர்ந்ததும் 
பணத்தின் மேல் 
காதல் 

கல்யாண வயதில் 
மனைவியின் மேல் 
காதல் 

குழந்தை பிறந்ததும் 
பிள்ளையின் மேல் 
காதல் 

பிள்ளையின் படிப்பு 
வேலை, திருமணம் 
எதிலும் பிடிப்பில்லாமல்
எல்லாவற்றின் மேலும்
பிடிப்பில்லாமல் ஒரு 
காதல்

சாய்வு  நாற்காலியில்
சாய்ந்து ஒட்காருகையில்
காலனுக்கு வருமோ என்மீது
காதல் ..

No comments: