காலையில் பூத்த தாமரையே
எனை பார்த்ததும் ஆனதென்ன செந்தாமரையே
இரவில் மலரும் அல்லி பூ நீ,
உன்னை நினைத்தாலே மனதில் ஏனோ தித்திப்பு
அன்றளர்ந்த தாமரை போல உன் சிரிப்புக்கு
சின்னஞ்சிறு குழந்தையின் சிரிப்பே ஈடு
பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை
பூக்குமாம் குறிஞ்சி
உன்னுடன் இருக்கையில் என் மனமோ
குற்றால நீர்வீழ்ச்சி
நிலவு உன்னை கண்டதும் வெட்கம் கொண்டதோ
அதனால் தேய்ந்து தேய்ந்து அமாவாசை ஆனதோ
உன்னை வானவில் என்றேன்
அதனால் தானோ விரைவில் மறைந்து என்னை
மறந்து போனாய்
நம்மை எவன் பிரிந்திருந்தாலும்
அந்த எமனே பிரிந்திருந்தாலும்
நான் கவலை கொண்டிருக்க மாட்டேன்
ஊமை கண்ட கனவு போல்
யாரிடமும் சொல்ல முடியாமல் தவிக்கின்றேன்
மழை கானா பயிர் போல தவிக்கின்றேன்
ஓகி புயல் போலாயினும் என்னை
மொத்தமாய் கொய்து விடு
எனை பார்த்ததும் ஆனதென்ன செந்தாமரையே
இரவில் மலரும் அல்லி பூ நீ,
உன்னை நினைத்தாலே மனதில் ஏனோ தித்திப்பு
அன்றளர்ந்த தாமரை போல உன் சிரிப்புக்கு
சின்னஞ்சிறு குழந்தையின் சிரிப்பே ஈடு
பூக்குமாம் குறிஞ்சி
உன்னுடன் இருக்கையில் என் மனமோ
குற்றால நீர்வீழ்ச்சி
நிலவு உன்னை கண்டதும் வெட்கம் கொண்டதோ
அதனால் தேய்ந்து தேய்ந்து அமாவாசை ஆனதோ
உன்னை வானவில் என்றேன்
அதனால் தானோ விரைவில் மறைந்து என்னை
மறந்து போனாய்
நம்மை எவன் பிரிந்திருந்தாலும்
அந்த எமனே பிரிந்திருந்தாலும்
நான் கவலை கொண்டிருக்க மாட்டேன்
ஊமை கண்ட கனவு போல்
யாரிடமும் சொல்ல முடியாமல் தவிக்கின்றேன்
மழை கானா பயிர் போல தவிக்கின்றேன்
ஓகி புயல் போலாயினும் என்னை
மொத்தமாய் கொய்து விடு
No comments:
Post a Comment