Thursday, December 28, 2017

பட்டாம்பூச்சி



அழகான மாலை வேளையில்
பள்ளி முடிந்து வந்து வீட்டின்
முற்றத்தில் அமர்ந்த வேளையில்
என் மடியில் வந்தமர்ந்த
அழகான உயிர் நீ

வண்ணம் பல கொண்டிருக்கிறாய்
நீ பல மனங்கள்
கொள்ளை கொண்டிருக்கிறாய்

சிறகு விரித்து  நீ பறக்கையில்
உன் பின்னே பறக்குமே  என்
இரு கண்கள்

தொட்டாலே ஒட்டிக்கொள்ளும்
என் கைகளில் உன் வண்ணங்கள்

பேசாமலே என் மனதில்
ஒட்டிக்கொண்ட சிறு கள்ளி நீ

பட்டம் போல் என் மனது உன் பின்னால்
பறப்பதால் தானோ
உன் பெயர்
பட்டாம்பூச்சி


No comments: