Monday, December 11, 2017

விளையாட்டு

ஓடி விளையாடு பாப்பா
நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா
கூடி விளையாடு பாப்பா
ஒரு குழந்தையை வையாதே பாப்பா.

அழகாய் கூடி விளையாட சொன்னவன்
நம் மகாகவி சுப்ரமணிய பாரதியார்

விளையாடிய பருவங்கள் 
மனதில் அழியாத சின்னங்கள் 

வெட்டிப் போட்ட நுங்கை வைத்து வண்டியோட்டிய 
நாட்கள்

நொண்டி, கிட்டிப்புள், பம்பரம், கண்ணாம்பூச்சி, கோலி
விதம் விதமாய் விளையாட்டுக்கள்
ஆடிய நாட்கள்

"மண் குழப்பி வீடு கட்டி" விளையாடி 
அதில் நாம் நம் உறவினர்களுடன் வசிக்க 
சொல்லி கொடுத்த விளையாட்டுக்கள் 

வாழ்வில் பல ஏற்றம் இரக்கம் இருக்கும் என 
சொல்லித்தந்த "பரமபதம்" விளையாட்டு 

பெண்கள் விளையாட சீர்வரிசையிலும் 
இடம் பிடித்த முன்னோர் கொடுத்த 
"பல்லாங்குழி" விளையாட்டு

சைக்கிளில் கால் எட்டாத போதும்
"குரங்கு பெடல்" போட்டு ஒட்டிய நாட்கள்

வாழ்வில் தடைகள் வந்தால் தகர்த்தெறிய
கற்றுதந்த நம் "தாயம்" விளையாட்டு

மூச்சு பயிற்சியும் உடல் ஆரோக்கியதையும்
சொல்லி தந்த "சடுகுடு" விளையாட்டு

வீரத்தையும் விலங்கின் மேல் தான் கொண்ட
பாசத்தையும் உலகுக்கு எடுத்து சொன்ன
"ஜல்லிக்கட்டு" விளையாட்டு

எத்தனையெத்தனை விளையாட்டுக்கள்
முன்னோர் விட்டு சென்ற பொக்கிஷங்கள்

உடலும், மனதும் ஆரோக்கியமாய் இருக்க
விளையாடிய விளையாட்டுக்கள்
இன்றைய சந்ததியும் விளையாடுகிறது
தன் கைபேசியிலும், கணினியிலும்,

மாற்றுங்கள் வீதியில் விளையாட
கற்றுத்தாருங்கள் ஆரோக்கியமான
சந்ததிகள் உருவாக ...

No comments: