Wednesday, December 20, 2017

தனிமை

தனிமை உணர தொடங்கிய நேரம்
கண்ணில் கண்ணீர் ஊறிய நேரம்

வார்த்தை எல்லாம் ஊமையாகிய வேளை
என் இதயம் பிரிந்து சென்ற வேளை

காதலி  பிரிந்தவலி தாங்கிக்கொள்வேன்
ஆனால்
தோழி, நீ பிரிந்தவலி தாங்கும் சக்தியிலையடி

மூன்றாமன் நம் நட்பின் குறுக்கே வந்தால்
குழி தோண்டி மூடி விட முடியுமோ நட்பை ?

நம் உதடுகள் வார்த்தைகளை பரிமாறிக்கொள்ளாமல்
இருக்கலாம்
ஆனால்
என்றும் உன் நினைவுகள் என்னிடம்
பேசிக்கொண்டுதானிருக்கின்றது

உனை பிரிந்து நான் வாடுவதை கண்டு
சிலர் சொல்கிறார்கள் நமக்குள் காதல் இருந்ததாம்
தோழி எப்படி புரியவைப்பேன்
நம் நட்பின் மேல் நமக்கிருந்த காதலை ?!

நீ மீண்டும் வருவாய் என என்றும் எட்டி பார்க்கும்
என் கண்களின் ஓரத்தில்
கண்ணீர்த்துளி ...

No comments: