Tuesday, December 26, 2017

கவிதைக்கொரு கவிதை

தினமும்
கண் விழிக்கும் முன்னே 
விழித்துக்கொள்ளும் உன் நினைவு

உன்னை படைத்த பிரம்மன்
மயங்கிருப்பான்
உன்னை போல இன்னொருத்தி
படைக்க
தயங்கிருப்பான்

எனை கண்டதும் என்னவள்
கொள்ளும் நாணத்திற்கு இணையான
கவிதையும் உண்டோ
இப்புவியில்

புல்வெளியில் படரும் பனிநீர் போல
என் மனதில் படர்ந்திருக்கும்
உனக்கான காதல்

கண்ணில் மை வைத்தாய்
என்னை அதில் விழ வைத்தாய்

முத்தி போன என் காதலால்
உன் மூக்குத்தி கூட நட்சித்திரமாய்
தெரியுதடி

உன் கால் கொலுசின் ஓசைதான்
நான் கேட்ட சிம்பொனி

ஒரு முறை பார்த்தாலே
இதயம் துடிக்கிறது
பார்க்காமல் சென்றாலோ
இதயம் படபடக்கிறது

அழகே உனக்காக அழகாய் ஒரு
கவிதை எழுதி உன்னை படிக்க சொன்னேன்
கவிதைக்கே என் கவிதை பிடிக்குமோ

No comments: