நண்பனின் கல்யாணம்
புறப்பட்டு அவன் வீடு சென்றேன்
கல்யாண வீடு கேட்கவும் வேண்டுமோ
ஆண்களும், பெண்களும் , குழந்தைகளும்
அவரவர் வேலைகளில் மும்முரமாய் இருந்தனர்
என்னை மட்டும் யாரோ ஒளிந்திருந்து
பார்ப்பதாய் உள்ளுணர்வு உணர்த்தியது
சில ப்ரியதனங்களுக்கு பிறகு திரும்பி
கண்டுவிட்டேன் அந்த இரு விழி அம்பை
கண்டதும் ஏனோ உனக்கு நாணம்
ஓடி மறைந்து கொண்டாய்
உன் தோழிகளிடத்தில் எதோ பேசி சிரிக்கிறாய்
உன் சிரிப்பில் சிறை கொண்டது என் மனம்
மிக சிறந்த இசை அன்று நான் கேட்ட
உன் கால் கொலுசின் ஓசைதான் என்பேன்
தைரியமிக்க நான் அன்று கோழையாகி போனேன்
உன்னிடம் பேச முடியாமல்
தொலைபேசி எண் காகிதத்தில் எழுதி
உன் தோழியிடம் கொடுத்து உ ன்னிடம்
கொடுக்க சொன்னேன்
வாங்கியதாய் தோழி சொன்னாள் அதன்பின்
உன்னை பார்க்கவில்லை
என் தொலைபேசி அழைக்கும் போதெல்லாம்
ஆவலுடுன் எடுக்கிறேன் அது நீயாக இருப்பாயோ என
அழைத்து ஒரு வார்த்தை சொல்லிவிடு
காதல் விதை விதைத்து , கல்யாணம் எனும்
அறுவடை செய்யவோம்
காத்திருக்கிறேன்
வானம் பார்த்து காத்திருக்கும் பயிர் போல
No comments:
Post a Comment