எனக்கொரு கவலை
இருந்தது கண்ணதாசன் வாழ்ந்த
நாட்களில் நானில்லயே என்று
இயல்பான வரிகளில் இதயத்தை
தொடமுடிந்தவன் யார் என எண்ணுகையில்
ஓர் நாள் காதில் ஒலித்தது ஒரு பாடல்
"எனக்குப்பிடித்த பாடல், அது உனக்கும் பிடிக்குமே"
பிடித்து தான் போனது பாடல் வரிகள்
"நீர்த்துளி தீண்டினால் நீ தொடும் ஞாபகம்
நீ தொட்ட இடமெல்லாம் வீணையின் தேன் ஸ்வரம்
ஆயிரம் அருவியாய் அன்பிலே அணைக்கிறாய்
மேகம் போல எனக்குள்ளே மோகம் வளர்த்து கலைக்கிறாய்"
உன் பாடல்கள் கேட்டபின் என் மன நிலையும் இது தான்
"நினைத்து நினைத்து பார்த்தால் நெருங்கி அருகில்
வருவேன் உன்னால் தானே நானே வாழ்கிறேன் "
பல வருடங்களுக்கு என் தொலைபேசியை
அழைத்தால் இந்த பாடல் தான் ஒலித்தன
இதற்காகவே அழைத்தவர்களும் ஏராளம்
"அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்
நமது கதையை காலமும் சொல்லும்"
சொல்லிக்கொண்டு தான் இருக்கும் உன் புகழ்
காலம் உள்ளவரை நண்பா
"தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே
தாலாட்டு பாடும் தாயின் அன்பும் தந்தை அன்பின் பின்னே
தகப்பனின் கண்ணீரைக் கண்டோர் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை"
என்று கேட்டாலும் என் கண்களில் கண்ணீர் எட்டி பார்க்க வைக்கும்
ஒரு பாடல் உண்டெனில் அது இது தான் என் தந்தையின்
தியாகம் கண்முன் நிழலாடும்
பெற்ற பிள்ளைக்காக "ஆனந்த யாழை மீட்டி எங்கள் நெஞ்சில்
வண்ணம் தீட்டினாய்"
இந்த மண்ணில் இதுபோல் யாரும் வாழ்ந்ததில்லை
என யோசிக்க வாய்த்த பாடல் வரிகள்
உன்ன விட இந்த உலகத்தில் ஒசந்தது
ஒன்னும் இல்லை ஒன்னும் இல்லை
தெய்வங்கள் எல்லாம் தோற்று தான் போனது
உன் உயிரை சீக்கிரம் எடுத்து
ஒரு வண்ணத்து பூச்சி என் வழிதேடி வந்தது
அதன் வண்ணங்கள் மட்டும் என் விரலோடு உள்ளது
கண்ணதாசனுக்கு பிறகு எனக்கொரு நா முத்துக்குமார்
என் பிள்ளைக்கு யார் ? விடைதெரியா கேள்வியில் நான்