Saturday, November 10, 2018

விழித்திடு மனிதா !

"நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில் "
    தமிழ் தாய் வாழ்த்தையும் நீர் கொண்டே தொடங்கினான் 
என் தமிழன் 

வீட்டுக்கு வரும் விருந்தினர் அனைவர்க்கும் தண்ணீர் 
முதலில்  கொடுத்தே உபசரிப்பான் அவன் 

ஆறுகள் அனைத்துக்கும் தான் உயர்வாய் மதிக்கும் 
பெண்ணின் பெயரையே வைத்தான் அவன் 

ஆற்றில் பார்த்தார் உன்னை என் பாட்டன் 
கிணற்றில் பார்த்தார் உன்னை என் அப்பா 
குழாயில் பார்க்கிறேன் உன்னை  நான் 
குப்பியில் பார்க்கிறான் உன்னை என் மகன்
 எங்கு பார்ப்பானோ உன்னை என் பேரன்

வேடிக்கையாய் தெரிந்தாலும் சந்ததியின் 
அவலம் அறைகிறது என் கன்னத்தில் 

தன் உடல் வியர்வை துளியை கூட உரமாக்கி 
விவசாயம் செய்தான் அவன் 

வானுயர கட்டிடங்கள் கட்டிய மனிதன் 
அழகு பார்த்தான் வானுயர்ந்த அழகான மரங்களை வெட்டி 

வெட்டியது மரம் அல்ல தன் சந்ததியின் 
மரண வாசலின் முதல் படி என அறியாமல் 

தவறி பெய்யும் மழையையும் சேர்த்து வைக்க 
தவறி விட்டோம் 

இனி மிஞ்சி இருப்பது என் கண்களின் ஓரத்தில் 
எட்டி பார்க்கும் கண்ணீர் துளியே 

அது வற்றுவதற்குள் விழித்திடு மனிதா !

No comments: