பாரத தாய்
அவளிடம் இன்று
புதியதாய் ஒரு வண்ணம்
கண்டேன்
இவ்வண்ணம்
வறுமையின்
வண்ணமல்ல
மங்கை அவள்
நெற்றியை
அலங்கரித்த
வண்ணமுமல்ல
கன்னி அவள்
கைகளை
மருதாணியிட்டு
வரவைத்த
வண்ணமல்ல
பிறந்ததும்
தொப்புள்கொடி
வெட்டியதும்
வந்த வண்ணமல்ல
பெண் குழந்தை
என தெரிந்தும்
கள்ளிப்பால்
கொடுக்காமல்
வளர்த்தெடுத்த
பெற்றோரின்
மனது விரும்பிய
வண்ணமல்ல
கணவனை
தெய்வம் என கொண்டு
அவன் இறந்தால் உடன் கட்டை
ஏறியதும் வந்த வண்ணமல்ல
இது
அபாயத்தின்
வண்ணம்
பிஞ்சு உடலை
பஞ்சு என கொண்டு
பிய்த்தெறிந்ததும்
தெளித்த குருதியின்
வண்ணம் இது
இது வண்ணம் என
கொண்டாடும்
பேதைகளின்
வன்மம்
எதை கொண்டு இதை
களைய போகிறோம்
கள்ளிப்பாலுக்கு
இரையாக்க நினைத்தீர்
தப்பித்தாள்
உன் சாதிக்கு இரையாக்க
பார்த்தீர்
தப்பித்தாள்
உன்னை மாய காதல் வலையில்
இரையாக்க நினைத்தீர்
தப்பித்தாள்
உடன்கட்டை ஏற்ற நினைத்தீர்
தப்பித்தாள்
தப்பி பிறந்தவள்
வாழ்வதே தப்பு தானோ ?
யார் இதற்கு காரணம்
சட்டமா ? இந்த நாடா ?
இல்லை இந்த நாட்டின்
அரசியல்வாதியா ?
இல்லை
மாற்றம் உருவாக
வேண்டும்
மக்களாகிய
நம்மிடமிருந்து
பெண்மையை போற்றுவோம்
தாயை போற்றுவோம்
தாய் நாட்டை போற்றுவோம்

No comments:
Post a Comment