Saturday, November 10, 2018

செவிலியர்


பெற்றெடுத்து உன்னை
அன்பாய் பார்த்துக்கொள்பவள்
தாய்
தான் பார்ப்பவர்கள் எல்லாரையும்
பெற்றெடுத்த தாயின் பாசத்தோடு
அரவணைப்பவர்கள்
செவிலியர்கள்

புனிதமானவள் என்று
தாயை சொல்வோம்
புனித பணியை
தினமும் செய்பவள்
செவிலி

பிணி வந்த நேரத்தில்
வீட்டில் இருப்பவரே
முகம் சுளிக்கும் இக்காலத்தில்
முகம் மலர்ந்து
பணிவிடை செய்ய
ஓடி வருபவள் இவள்

அறுவை சிகிச்சை ஆயினும்
ஆறாத நோயாயினும்
உடன் இருப்பவர்களுக்கு
ஆறுதலாய் இவள்
இருப்பாள்

மருத்துவம் தான்
கணினி துணை கொண்டு
பலமடங்கு வளர்ந்தாலும்
செவிலி இவள் இன்றி
எதுவும் வெற்றி அடையாது

தாய் போல் இவள் நம்மை
அரவணைத்தாலும்
ஏனோ  சகோதரி என்றே
இவளை அழைக்கிறோம்

பொறுமைக்கு நான்
கண்ட உவமை இவள்

நேரம் காலம் பார்க்காது
பொறுப்பாய் புன்னகை சிந்தி
காக்கும் நீயும்
பிணி கொண்ட நேரத்தில்
நான் கண்டா
தெய்வம் தான்
நீதான்

No comments: