எனக்கு மட்டும்
ஏன் இப்படி ?
பேசி பழகிய உறவுகள்
பேச மறந்த நிகழ்வுகள்
எனக்கு மட்டும்
ஏன் இப்படி ?
அன்பு காட்டும் தாய்
அக்கறை காட்டும் தந்தை
அரவணைக்க ஒரு சகோ
இருந்தும் தனிமையாய் உணர
எனக்கு மட்டும்
ஏன்இப்படி?
கணவன் என என்னை கொண்ட மனைவி உண்டு
தந்தை என அழைக்க பிள்ளையும் உண்டு
இருந்தும் தனிமரம் என உணர
எனக்கு மட்டும்
ஏன் இப்படி ?
சந்தோஷமாய் பேசி ஆனந்த தேன் கூட்டில்
உலா வரும் வேளைகளில் எல்லாம்
உடன் கல்லெறிந்து கலைக்கும் தருணங்கள்
எனக்கு மட்டும்
ஏன் இப்படி?
என் சோகம் என்னை நேசிப்பவர்களை
காயபடுத்தும் என்று அறிந்தே
விலகி செல்ல முயல்கிறேன்
எனக்கு மட்டும்
ஏன் இப்படி?
நட்பென்று பழகிய உறவுகள்
முள்ளென்று குத்தும் வேளை
மரணத்தின் விளிம்பில் நிற்பதாய்
உணர்கிறேன்
எனக்கு மட்டும்
ஏன் இப்படி ?
ஆண்மகனாய் பிறந்ததால்
வெளிப்படையாய் அழவும்
திராணி இன்றி உள்ளுக்குள் குமுறுகிறேன்
யாருமே அறியாவண்ணம்
எனக்கு மட்டும்
ஏன் இப்படி ?
யாருக்கும் துரோகம் இழைக்கவில்லை
நட்பெனும் போர்வையில்
துரோகத்தின் வலையில் பலநாள்
சிக்குண்டு திக்கின்றி கிடந்திருக்கிறேன்
எனக்கு மட்டும்
ஏன் இப்படி?
இறைவா
நான் செய்த தவறை திருத்த
எனக்காக இல்லாவிடினும்
என்னை நேசிக்கும்
சில உறவுகளுக்காக வேணும்
எனக்கொரு ஒரு வாய்ப்பு கொடு
ஏன் இப்படி ?
பேசி பழகிய உறவுகள்
பேச மறந்த நிகழ்வுகள்
எனக்கு மட்டும்
ஏன் இப்படி ?
அன்பு காட்டும் தாய்
அக்கறை காட்டும் தந்தை
அரவணைக்க ஒரு சகோ
இருந்தும் தனிமையாய் உணர
எனக்கு மட்டும்
ஏன்இப்படி?
கணவன் என என்னை கொண்ட மனைவி உண்டு
தந்தை என அழைக்க பிள்ளையும் உண்டு
இருந்தும் தனிமரம் என உணர
எனக்கு மட்டும்
ஏன் இப்படி ?
சந்தோஷமாய் பேசி ஆனந்த தேன் கூட்டில்
உலா வரும் வேளைகளில் எல்லாம்
உடன் கல்லெறிந்து கலைக்கும் தருணங்கள்
எனக்கு மட்டும்
ஏன் இப்படி?
என் சோகம் என்னை நேசிப்பவர்களை
காயபடுத்தும் என்று அறிந்தே
விலகி செல்ல முயல்கிறேன்
எனக்கு மட்டும்
ஏன் இப்படி?
நட்பென்று பழகிய உறவுகள்
முள்ளென்று குத்தும் வேளை
மரணத்தின் விளிம்பில் நிற்பதாய்
உணர்கிறேன்
எனக்கு மட்டும்
ஏன் இப்படி ?
ஆண்மகனாய் பிறந்ததால்
வெளிப்படையாய் அழவும்
திராணி இன்றி உள்ளுக்குள் குமுறுகிறேன்
யாருமே அறியாவண்ணம்
எனக்கு மட்டும்
ஏன் இப்படி ?
யாருக்கும் துரோகம் இழைக்கவில்லை
நட்பெனும் போர்வையில்
துரோகத்தின் வலையில் பலநாள்
சிக்குண்டு திக்கின்றி கிடந்திருக்கிறேன்
எனக்கு மட்டும்
ஏன் இப்படி?
இறைவா
நான் செய்த தவறை திருத்த
எனக்காக இல்லாவிடினும்
என்னை நேசிக்கும்
சில உறவுகளுக்காக வேணும்
எனக்கொரு ஒரு வாய்ப்பு கொடு
No comments:
Post a Comment