Saturday, November 10, 2018

என் காதல்



பலநாள் இரவில் என் தூக்கத்தை
ஆக்ரமித்தவள் நீயே

என் காதலை சொல்ல எத்தனித்து
வார்த்தை வர மறுத்து என்னை நானே
வெறுத்த நாட்கள் ஏராளம்

காதல் சொல்ல வாங்கிய மலர் கூட
மனம் மாறி மணம் வீச தவறலாம்
ஆனால் என் காதல் என்றும் மாறாதே

என் மௌனம் சொல்லாத காதலை
என் வார்த்தைகள் தான் சொல்லிடுமோ

ஓயாமல் ஆர்ப்பரிக்கும் அலைகடல்
போன்றதல்ல என் காதல்
பொக்கிஷம் பல உடன் இருந்தும்
அமைதியாய் இருக்கும் நடுக்கடல் போல
என் காதல்

தொலைபேசி அழைப்பு ஒலிக்கும் போதெல்லாம்
உன் முகம் வந்து வந்து போகிறது

அரட்டை அரங்கத்தில் ஓசை இல்லா பல குரல் கேட்பினும்
உன்னிடம் இருந்து வரும் ஒரு குறுந்செய்திக்கு
காத்திருப்பதே சுகமாகி போனதெனுக்கு

என் இதயத்தை உன்னிடம் கொடுத்துவிட்டேன்
அன்பே என்று நீ
என் இதயத்தில் இருப்பதை என்று நீ அறிவாயோ ?!

என் காதல் அது நீ உணரும் வரை
சுகமான வலி மட்டும் மிச்சம் !

No comments: