பெண்னை ஒரு தெய்வமாக வணங்கும் நாடே
பெண்ணை ஓட ஓட துரத்துகிறதே .
அன்று பெண்களை போற்றிய கைகள்
இன்று ஆனதேனோ அவளை சூறையாடும் கைதிகள்
உயிரை படைக்கும் சக்தி பெண்ணிடமே உள்ளது
அவளை அழித்தால் அழியும் உலகு முடிவு உன்னிடமே உள்ளது
அன்புக்கு இலக்கணம் அம்மா
அவள் அன்பையே இழிவாக்குவது தகுமா
அச்சத்தின் விளிம்பில் இருக்கிறாள் பெண்
அவளை காப்பாற்ற வேண்டிய நாடோ சதியின் பின்
வீதியில் காலடி எடுத்துவைக்க தயங்குகிறாள்
அவள் வாழ்க்கையின் பயத்தை எண்ணி
சுதந்திரமான குடிமக்கள் இருக்கும் நாட்டிலே
சுதந்திரம் இல்லையே பெண்களுக்கே
பெண் என்பவள் நாட்டின் கண்
அவளை இழிவு படுத்தினால்
நம் வாழ்க்கை மண்

No comments:
Post a Comment