Thursday, December 28, 2017

பட்டாம்பூச்சி



அழகான மாலை வேளையில்
பள்ளி முடிந்து வந்து வீட்டின்
முற்றத்தில் அமர்ந்த வேளையில்
என் மடியில் வந்தமர்ந்த
அழகான உயிர் நீ

வண்ணம் பல கொண்டிருக்கிறாய்
நீ பல மனங்கள்
கொள்ளை கொண்டிருக்கிறாய்

சிறகு விரித்து  நீ பறக்கையில்
உன் பின்னே பறக்குமே  என்
இரு கண்கள்

தொட்டாலே ஒட்டிக்கொள்ளும்
என் கைகளில் உன் வண்ணங்கள்

பேசாமலே என் மனதில்
ஒட்டிக்கொண்ட சிறு கள்ளி நீ

பட்டம் போல் என் மனது உன் பின்னால்
பறப்பதால் தானோ
உன் பெயர்
பட்டாம்பூச்சி


Tuesday, December 26, 2017

கவிதைக்கொரு கவிதை

தினமும்
கண் விழிக்கும் முன்னே 
விழித்துக்கொள்ளும் உன் நினைவு

உன்னை படைத்த பிரம்மன்
மயங்கிருப்பான்
உன்னை போல இன்னொருத்தி
படைக்க
தயங்கிருப்பான்

எனை கண்டதும் என்னவள்
கொள்ளும் நாணத்திற்கு இணையான
கவிதையும் உண்டோ
இப்புவியில்

புல்வெளியில் படரும் பனிநீர் போல
என் மனதில் படர்ந்திருக்கும்
உனக்கான காதல்

கண்ணில் மை வைத்தாய்
என்னை அதில் விழ வைத்தாய்

முத்தி போன என் காதலால்
உன் மூக்குத்தி கூட நட்சித்திரமாய்
தெரியுதடி

உன் கால் கொலுசின் ஓசைதான்
நான் கேட்ட சிம்பொனி

ஒரு முறை பார்த்தாலே
இதயம் துடிக்கிறது
பார்க்காமல் சென்றாலோ
இதயம் படபடக்கிறது

அழகே உனக்காக அழகாய் ஒரு
கவிதை எழுதி உன்னை படிக்க சொன்னேன்
கவிதைக்கே என் கவிதை பிடிக்குமோ

பணம்

பணம் கையில் இருந்தால் அந்தரத்தில்
தான் பறக்க தோன்றும் -அது அந்த
பணத்தின் குற்றமா ?
இல்லை பணம்வைத்தவனின்
குணத்தின் குற்றமா ?

சின்னஞ்சிறு வயதில் அப்பா தரும்
தினசெலவு  ஐந்து ரூபாயில்
இலந்தை பழவும் ,
பேர் சொன்னாலே எச்சில் ஊரும்
நெல்லிக்காயில்  உப்பும் சிறிது மிளகுபொடியுமிட்டு
நண்பர்களுடன் பகிர்ந்துண்ட நாட்கள்

"எப்போதோ கிடைக்கும் பலாக்காயை விட
இப்போது கிடைக்கும் களாக்காய் மேல் என
வாங்கி தின்ற புளிப்பும் இனிப்பும் கொண்ட
களாக்காய் "

மிச்சம் சிறுது சிறுது பிடித்து தம்பிக்கு பிடித்த
பால் ஐஸ் வாங்கி தந்த மன நிறைவு

இன்று பணம் நிறைய கொடுத்து
பீட்சாக்களும் பர்கர்களும் சாப்பிடுகையில்
வருவதில்லை

வீட்டில் அஞ்சறை பெட்டியிலும்
அஞ்சாறு சின்ன பெட்டியிலும்
அம்மா மறைத்து வைத்து
தேவையான சமயத்தில் வெளிவரும்
அலாவுதீன் பூதம் போல
காத்திட்ட அந்த பணத்திற்கு இணை

வங்கி லாக்கரிலும் ,
மெத்தைக்கு அடியிலும்
தண்ணீர் தொட்டியிலும் சேர்த்து வைத்திருக்கும்
பணம் ஈடாகுமோ ?

அளவாய் இருந்தால்
ஆனந்த களிப்பையும்
அதிகம் இருந்தால்
அச்சத்தில் தவிப்பையும்
தரும் இந்த பணம்

அது பணத்தின் குணமல்ல
அது வைத்திருக்கும் மனிதனின்
குணம்

அளவோடு வைத்திரு
வளமோடு வாழ்ந்திரு ...


Friday, December 22, 2017

அவள் !

நண்பனின் கல்யாணம் 
புறப்பட்டு அவன் வீடு சென்றேன் 
கல்யாண வீடு கேட்கவும் வேண்டுமோ 
ஆண்களும், பெண்களும் , குழந்தைகளும் 
அவரவர் வேலைகளில் மும்முரமாய் இருந்தனர் 

என்னை மட்டும் யாரோ ஒளிந்திருந்து 
பார்ப்பதாய்  உள்ளுணர்வு உணர்த்தியது 

சில ப்ரியதனங்களுக்கு பிறகு திரும்பி  
கண்டுவிட்டேன் அந்த இரு விழி அம்பை 
கண்டதும் ஏனோ உனக்கு நாணம்
ஓடி மறைந்து கொண்டாய் 

உன் தோழிகளிடத்தில் எதோ பேசி சிரிக்கிறாய் 
உன் சிரிப்பில் சிறை கொண்டது என் மனம் 

மிக சிறந்த இசை அன்று நான் கேட்ட 
உன் கால் கொலுசின் ஓசைதான் என்பேன் 

தைரியமிக்க நான் அன்று கோழையாகி போனேன் 
உன்னிடம் பேச முடியாமல்

தொலைபேசி எண் காகிதத்தில் எழுதி 
உன் தோழியிடம் கொடுத்து உ ன்னிடம் 
கொடுக்க சொன்னேன் 

வாங்கியதாய் தோழி சொன்னாள் அதன்பின் 
உன்னை பார்க்கவில்லை 

என் தொலைபேசி அழைக்கும் போதெல்லாம் 
ஆவலுடுன் எடுக்கிறேன் அது நீயாக இருப்பாயோ என 

அழைத்து ஒரு வார்த்தை சொல்லிவிடு 
காதல் விதை விதைத்து , கல்யாணம் எனும் 
அறுவடை செய்யவோம் 
காத்திருக்கிறேன் 

வானம் பார்த்து காத்திருக்கும் பயிர் போல 

நண்பா ,

சின்ன சின்னதாய் சேகரித்து
வளர்த்த நட்பு

பள்ளியில் வீட்டுப்பாடம் எழுதாமல்
நானிருக்க
எழுதியதை ஆசிரியரிடம்
காண்பிக்காமல் என்னோடு
முட்டிபோட்டு துணை நின்றவன்

உணவு இடைவேளையில்
இரு வீட்டு  உணவையும் ஒன்றாக்கி
என்னோடு பகிர்ந்துண்டவன்

விளையாட்டாய் செய்யும்
குறும்புக்கெல்லாம் திட்டம் தீட்டி
என்னோடு செயல்வடிவம் தந்தவன்

ஜாதி, மதம், பேதமெல்லாம்
கடந்து என்றும் என்னுடன்
துணை நின்றவன்

தொலைபேசியும் , கணினியும்
எட்டா கனியாய் இருந்த காலத்தில்
என்றும் என்னுடன் இருந்தவன்

பெற்றோருக்கு வேலை மாற்றலாகி
பள்ளியும் நீ விட்டு ஏதோ ஒரு ஊருக்கு
நீ சென்றதாய் நினைவு

இன்று பள்ளியில் படித்த பாடத்தை விட
பள்ளியில் உன்னுடன் கழித்த நாட்கள்
தான் என்றும் என் நினைவில்

தொலைதூரம் நீ இருந்தாலும்
நண்பா ,
என்றும் உன் நினைவுகள்
என் அருகில் இருக்கும்
மலரும் நினைவுகளாய் ..


Thursday, December 21, 2017

இயற்கையாய் !

என் வீட்டு பக்கத்தில் இருந்தது
மரம் இரண்டு
பேர் தெரியா மரம் ஒன்று
மாமரம் என்ற பேர் கொண்ட மற்றொன்று

யார் விதைத்த விதையில் மலர்ந்ததென்று
யாருக்கும் அறியேன்

வெயிலுக்கு இதமாய் நிழல் தரும் மரம்
பள்ளி சென்று திரும்புகையில்  யாரையோ
தொலைத்து தேடும் குயிலின் ஓசை
எனக்கு ஒரு வரவேற்பு கவிதை

பேர் தெரியா மரத்தில் இருந்தது
என் தந்தை கட்டி தந்த ஊஞ்சல்
தோழர்களுடன் கொஞ்சி அதில் விளையாடிய
நாட்கள் இன்னும் நிற்காமல் ஆடுகிறது
என் நெஞ்சில்

அதனால் அதற்கு பெயர் வைத்தேன்  ஊஞ்சல்மரம்,
இதுவும் காய் காய்க்கும், பழுக்கும் , தரையில் விழுந்து
அழுகும் தீண்டுவார் யாருமிலர்

பக்கத்தில் மாமரம் , இலை வேண்டி பலர் , காய் வேண்டி பலர்
கனி வேண்டி பலர் காத்திருக்கலாயினர்

ஓர் மாலை தொலைக்காட்சியில் எல்லை தாண்டியதாய்
சுடபட்ட மீனவர் செய்தி

ஆனால் இந்த மாமரம் தன் கிளையை பரப்பிஇருந்தது
ஊஞ்சல் மரத்தின் மேல்.  அதற்காய்  சண்டையிட்டதாய்
நினைவில்லை

இரவில் சூறாவளி காற்று வீசியது பயந்து அம்மாவின்
அரவணைப்பில் உறங்கி காலையில் கண் விழித்து பார்க்கையில்
 ஊஞ்சல் மரம் வேருடன் தரையில் இருந்தும்
அதன் கிளைகள் மாமரத்தை விழாமல் தாங்கிருந்தது ..

வெள்ளம் வந்தபோது நம்மை பேர் தெரியா
அன்பு உள்ளங்கள் காத்தது போல

மரம் இருந்த சுவடு அகற்றப்பட்டது சில நாட்களில்
அதே இடத்தில் மீண்டும் துளிர்விட்டது  செடி
இயற்கை அழித்ததை இயற்கை உருவாக்குகிறது

மனிதா ,இயற்கையை இயற்கை அழிக்கும் நீ
அதை உருவாக்குவது எப்போது ?

Wednesday, December 20, 2017

தனிமை

தனிமை உணர தொடங்கிய நேரம்
கண்ணில் கண்ணீர் ஊறிய நேரம்

வார்த்தை எல்லாம் ஊமையாகிய வேளை
என் இதயம் பிரிந்து சென்ற வேளை

காதலி  பிரிந்தவலி தாங்கிக்கொள்வேன்
ஆனால்
தோழி, நீ பிரிந்தவலி தாங்கும் சக்தியிலையடி

மூன்றாமன் நம் நட்பின் குறுக்கே வந்தால்
குழி தோண்டி மூடி விட முடியுமோ நட்பை ?

நம் உதடுகள் வார்த்தைகளை பரிமாறிக்கொள்ளாமல்
இருக்கலாம்
ஆனால்
என்றும் உன் நினைவுகள் என்னிடம்
பேசிக்கொண்டுதானிருக்கின்றது

உனை பிரிந்து நான் வாடுவதை கண்டு
சிலர் சொல்கிறார்கள் நமக்குள் காதல் இருந்ததாம்
தோழி எப்படி புரியவைப்பேன்
நம் நட்பின் மேல் நமக்கிருந்த காதலை ?!

நீ மீண்டும் வருவாய் என என்றும் எட்டி பார்க்கும்
என் கண்களின் ஓரத்தில்
கண்ணீர்த்துளி ...

Friday, December 15, 2017

கொய்து விடு

காலையில் பூத்த தாமரையே
எனை  பார்த்ததும் ஆனதென்ன செந்தாமரையே

இரவில் மலரும் அல்லி பூ  நீ,
உன்னை நினைத்தாலே மனதில் ஏனோ தித்திப்பு

அன்றளர்ந்த தாமரை போல உன் சிரிப்புக்கு
சின்னஞ்சிறு குழந்தையின் சிரிப்பே ஈடு

பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை
பூக்குமாம் குறிஞ்சி
உன்னுடன் இருக்கையில் என் மனமோ
குற்றால நீர்வீழ்ச்சி

நிலவு உன்னை கண்டதும் வெட்கம் கொண்டதோ
அதனால் தேய்ந்து தேய்ந்து அமாவாசை ஆனதோ

உன்னை வானவில் என்றேன்
அதனால் தானோ விரைவில் மறைந்து என்னை
மறந்து போனாய்

நம்மை எவன் பிரிந்திருந்தாலும்
அந்த எமனே பிரிந்திருந்தாலும்
நான் கவலை கொண்டிருக்க மாட்டேன்

ஊமை கண்ட கனவு போல்
யாரிடமும் சொல்ல முடியாமல் தவிக்கின்றேன்

மழை கானா பயிர் போல தவிக்கின்றேன்
ஓகி புயல் போலாயினும் என்னை
மொத்தமாய் கொய்து விடு

காதல் ..

உலகமறியா வயதில்
உலகமாய் இருந்த
தாயின் மேல்
காதல்

தவிழ தொடங்கியதும்
காணும் பொருளின்மேல் எல்லாம்
காதல்

நடக்க தொடங்கியதும் 
எட்டும் பொருளுக்கெல்லாம் 
காதல் 

பள்ளி பருவத்தில் 
பென்சில் தந்த பள்ளித்தோழியின் மேல் 
காதல் 

விடலை பருவத்தில்
விளையாட்டாய் 
காதல் 

கல்லூரி வாழ்க்கையில் 
கானால் நீராய் ஒரு 
காதல் 

வேலைக்கு  சேர்ந்ததும் 
பணத்தின் மேல் 
காதல் 

கல்யாண வயதில் 
மனைவியின் மேல் 
காதல் 

குழந்தை பிறந்ததும் 
பிள்ளையின் மேல் 
காதல் 

பிள்ளையின் படிப்பு 
வேலை, திருமணம் 
எதிலும் பிடிப்பில்லாமல்
எல்லாவற்றின் மேலும்
பிடிப்பில்லாமல் ஒரு 
காதல்

சாய்வு  நாற்காலியில்
சாய்ந்து ஒட்காருகையில்
காலனுக்கு வருமோ என்மீது
காதல் ..

Monday, December 11, 2017

துணை உண்டோ !?


இயற்கைக்கு என்ன கோபமோ
அவ்வப்போது சீறி கொல்கிறது  மனிதனை

ஏழை விவசாயியும், மீனவனும்
இயற்கையே  உன்னை நம்பி இருப்பவர்கள்
உன்னை தொழுபவர்கள்

தினம் கடலுக்கு மீன் பிடிக்க செல்வது அவன் குடும்பம்
ஒருவேலை உணவு உண்ணவே

கடலுக்கு சென்ற கணவன் வீடு திருப்புவானோ என
உறக்கம் தொலைத்து காத்திருப்பாள் அவன் வரவை
எதிர்நோக்கி கரையில் அவன் மனைவி

சீற்றம் மிக்க கடல் அலை அவனை உள்ளிழுத்து விடுமோ
இல்லை
தமிழ் மீனவன் தானே என கடலில் எல்லை வகுத்த
மிருக்கத்தின் துப்பாக்கிக்கு இறையாவானோ ?

நித்தம் நித்தம் இயற்கையை நம்பி வாழ்பவன் அவன்
செயற்கையாய் பல தடைகள் உருவாக்குபவர் மத்தியில்
இயற்கையே உனக்கும் ஏன் அவன் மேல் கோபம்

"ஓகி"  புயலாய் வந்து ஓங்கி அடித்திருக்கிறாய்
உன்னால் எப்போதும் அதிகம் பாதிக்கபடுவது
அவர்களே

மீனவர்களின் உயிரை விட பெரியது இடைதேர்தல்
என வாக்காளர் பெயர் பட்டியல் சரி பார்க்க செல்லும்
அரசியல்வாதிகள் இருக்கும் இந்நாட்டில்

இறந்தவர்களின் பெயர் பட்டியலில் தன் உறவுகளின்
பெயர் இருக்கா என பார்க்கும் அவலம் மீனவனுக்கு

இதோ இந்தஇன்னல்களுக்கிடையேயும் பணம்
பார்க்க நினைக்கும் ஈன பிறவிகளும் உண்டு

அதே சமயம் உதவ ஜாதி, மத, இன  வேறுபாடின்றி
உதவிகரம் நீட்டிய நல் உள்ளங்களும் உண்டு மறுப்பதிற்கில்லை

முல்லைக்கு தேர் தந்தவன் பாரி
மயிலுக்கு போர்வை தந்தவன் பேகன் போல
இன்னும் இடர் வந்தால் உதவும் பெயர் சொல்லா வள்ளல்கள்
இருக்கத்தான் செய்கிறார்கள்

பல மாதமாக தலைவிதியை எண்ணி தலைநகரில்
போராடும் ஏழை விவசாயின் செய்திகூட
100 வது நாள் ஓடும் சினிமாவின் கேளிக்கை செய்தி
போலவே கடக்கிறது

400 பேரின் மரணமும் நம்மை ஒரு நிமிட செய்தியாகவே
கடப்பது வேதனை.

இயற்கையை செயற்கையால் வெல்ல நினைக்கும்
மனிதனுக்கு இயற்கை அவ்வப்போது சினம் கொண்டு
பாடம் எடுக்கிறது

மண்ணை தெய்வமாக நினைக்கும் விவசாயியையும்
கடலை தெய்வமாக நினைக்கும் மீனவனையும்
காக்க இயற்கையே உன்னை விட
துணை உண்டோ !!!

விளையாட்டு

ஓடி விளையாடு பாப்பா
நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா
கூடி விளையாடு பாப்பா
ஒரு குழந்தையை வையாதே பாப்பா.

அழகாய் கூடி விளையாட சொன்னவன்
நம் மகாகவி சுப்ரமணிய பாரதியார்

விளையாடிய பருவங்கள் 
மனதில் அழியாத சின்னங்கள் 

வெட்டிப் போட்ட நுங்கை வைத்து வண்டியோட்டிய 
நாட்கள்

நொண்டி, கிட்டிப்புள், பம்பரம், கண்ணாம்பூச்சி, கோலி
விதம் விதமாய் விளையாட்டுக்கள்
ஆடிய நாட்கள்

"மண் குழப்பி வீடு கட்டி" விளையாடி 
அதில் நாம் நம் உறவினர்களுடன் வசிக்க 
சொல்லி கொடுத்த விளையாட்டுக்கள் 

வாழ்வில் பல ஏற்றம் இரக்கம் இருக்கும் என 
சொல்லித்தந்த "பரமபதம்" விளையாட்டு 

பெண்கள் விளையாட சீர்வரிசையிலும் 
இடம் பிடித்த முன்னோர் கொடுத்த 
"பல்லாங்குழி" விளையாட்டு

சைக்கிளில் கால் எட்டாத போதும்
"குரங்கு பெடல்" போட்டு ஒட்டிய நாட்கள்

வாழ்வில் தடைகள் வந்தால் தகர்த்தெறிய
கற்றுதந்த நம் "தாயம்" விளையாட்டு

மூச்சு பயிற்சியும் உடல் ஆரோக்கியதையும்
சொல்லி தந்த "சடுகுடு" விளையாட்டு

வீரத்தையும் விலங்கின் மேல் தான் கொண்ட
பாசத்தையும் உலகுக்கு எடுத்து சொன்ன
"ஜல்லிக்கட்டு" விளையாட்டு

எத்தனையெத்தனை விளையாட்டுக்கள்
முன்னோர் விட்டு சென்ற பொக்கிஷங்கள்

உடலும், மனதும் ஆரோக்கியமாய் இருக்க
விளையாடிய விளையாட்டுக்கள்
இன்றைய சந்ததியும் விளையாடுகிறது
தன் கைபேசியிலும், கணினியிலும்,

மாற்றுங்கள் வீதியில் விளையாட
கற்றுத்தாருங்கள் ஆரோக்கியமான
சந்ததிகள் உருவாக ...

என் ஒரு தலை காதல்

நட்பாய் இருக்க தான் விரும்புகிறேன்
நட்பில் இருக்க தான் விரும்புகிறேன்

ஆசை என்னை அடக்க நோகிறேன்
காதல் என்னை நசுக்க வாடுகிறேன்

நட்பில் காதல் பூ பூக்க
தண்ணீர் என்று ஊற்றினேனோ ?!
காதல் சொல்லி நட்பை இன்று
நான் இழப்பேனோ ?!

புரிந்துணர்வது நமக்குள் உண்டு தான்
இந்த காதல் உணர்வை புரியவைக்க
தமிழில் வார்த்தை இன்றி தவிக்கிறேன் நான்


எத்தனையோ கதைகள் மணிக்கணக்கில்
பேசியிருக்கிறேன் உன்னிடம் நான் ...
இந்த ஒற்றை சொல் சொல்ல
தவிக்கிறேன் நான் ....

என்
மனதுக்குள் இந்த காதல் சாகுமோ
இல்லை
உன்
மனதுக்குள் வேரூன்றி முளைக்குமோ ?!

உன்னை தீண்டிய காற்று
என்னையும் தீண்டி செல்கிறது என்ற
நினைப்பில்  முடியுமோ
என் ஒரு தலை காதல்

Sunday, December 10, 2017

முதிர்கன்னி

எல்லோர் போலவும் தான் நான் பிறந்தேன்
தாயின் வயிற்றில் பத்து மாதம் கிடந்தது

அவளை அதிகம் துன்புறுத்தாமல் சுகமாய்
சுகபிரசவமாய் தான் பிறந்தேன்

தம்பியுடனும், தங்கையுடனும்
சிரித்து , பேசி, படித்து , விளையாடி
சின்ன சின்ன சண்டைகளிட்டு
கழிந்தது என் சிறுவயது பருவம்

கன்னி வயதை எட்டியவுடன்
எனக்குள்ளும் பட்டாம்பூச்சிகள்
பறந்தது,

காதலன் குதிரை மீதமர்ந்து
என்னை கவர்ந்து செல்வதாய்
கனவும் வந்தது

கல்லூரியில் என்னுடன் அன்பாய் பழகியவன்
காதலிப்பதாய் சொன்னவுடன்  வெட்கி
தலைகுனிந்து வீட்டுக்குஓடி வந்தேன்

என் நாணம் எல்லாம் என் தலையணை அறியும்

அவனுடன் பேசி பேசி கதைகள் அனைத்தும்
தீர்ந்ததோ நானறியேன்

பேச்சை நிறுத்திவிட்டான்  என் கல்லூரி காதல்
கானல் நீர் போல ஆனது

பெண் பார்க்க தொடங்கும் நேரம் என்
கண்களில் கண்ணீரும் வற்றியிருந்தது

பெற்றோர்  சொல்லும் மாப்பிள்ளை
வந்து கரம் பிடிக்க காத்திருந்தேன்

பெண் பார்க்க வர சொன்னேன் பிடித்ததாய் வரன் சொல்ல
நாணம் வர மறுத்தது
சென்றவர்கள் தோஷம் ஒன்றுண்டு என்று சொல்ல போக
பிடித்தவளும் பிடிக்காமல் போன மர்மமென்னவோ நானறியேன்

தடங்கல்கள் பல வந்ததும் தங்கைக்கும் தடையாவேனோ ?!
என எண்ணி அவளுக்கு மணமுடிக்கப்பட்டது

அக்கா என அழைத்தவனும் வாழ்க்கையை எனக்காக
தொலைப்பது நியாயமாகுமோ ?! மணமுடிந்தது அவனுக்கும்

என்னதான் சுகபிரசவத்தில் பெற்றாலும்
என் தாயின் வாழ்வில் என் நினைப்பில் நோயுற்றாள்

எப்போது எப்போது அவன் வருவானோ
என காத்திருக்க  எட்டி பாத்தது
காதோரம் நரை

பெட்றோர் மனம்வாட ,உற்றோர் வசைபாட
விருந்துக்கும் வர வேண்டாம் என ஒதுக்க
நான் செய்த பாவமென்னவோ ?

ராமன் வர வேண்டவில்லை
ராவணன் வந்தால் மறுப்பில்லை

பற்றி எரியும் ஆசைகளில் நீர் ஊற்றி
கொண்டிருக்கிறேன்

தாலி யில் என் பேர் எழுத மறந்தவன்
யாரோ !?

சுகமாய் பிறந்தவள் வாழ்வின் சுகம்
மறந்து காத்திருக்கிறேன்

Sunday, December 3, 2017

இயற்கையின் இசை !

இசையோடு பிறக்கிறோம்
இசையோடு வளருகிறோம்
இசையோடு பயணிக்கிறோம்
மரணத்துக்கு பிறகும் இசை இசைத்துக்கொண்டிருக்கிறது

என் சந்தோஷமும் துக்கமும்
என்னுடன் பகிர்ந்துகொள்வது
என் இசை

மறந்தும் உன்னை கேட்காமல்
நான் இருப்பதில்லை
எங்கும் நீ இருக்கிறாய்

விடியலை நோக்கி புறப்பட கூவும்
சேவலின் ஒலியும்
இசைதான்

இருப்பதாய் மற்றவர்களுடன்
பகிர்ந்துண்ண கரையும்
காக்கையின் ஒலியும்
இசைதான்

பிரிந்தவரை எண்ணி எண்ணி வாடி
பாடும் குயிலின் ஏக்க ஒலியும்
இசைதான்

அழகான மாலையில்
நளினமாடி வீசும் மரங்களின்
குளிர்காற்றும்
இசைதான்

ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து ரசிக்க
அடை மழையும் இசைதான்

நதிநீரின் அசைவுகளிலும்
கடக்கிறது மனதில் அமைதியாய்
இசை

ஜாதி, மதம், இனம், மொழி தாண்டி
நம்மை ரசிக்க வைப்பது
இசை

உலகில்
இயற்கையை விட சிறந்த இசையை
இசைப்பவனும் உண்டோ ?

இயற்கையை ரசிப்போம்
இசையை ரசிப்போம்
வா தோழா !!

Sunday, November 26, 2017

என் அண்ணா !

சகோதர சகோதரி பாசம்
நினைத்தாலே நினைவெல்லாம் பாயசம்

தந்தையால் எங்கும் நம்முடன்
வரமுடியாது என்ற காரணத்தால்
படைத்தானோ சகோதரனை இறைவன்

கண்டிப்பில் அவன் என் தந்தை
அரவணைப்பில் அவன் என் தாய்

அவனுக்கு கிடைக்கும் அன்பளிப்பெல்லாம்
தங்கை எனக்காய் எடுத்து வைத்து கொடுப்பான்

உனக்கு அண்ணா !? என்றால் உன் சந்தோஷம் தான்
எனக்கு முக்கியம் என்பாய்

குறும்புகள் நான் செய்ய ஏனோ பழியை நீ
ஏற்று கொள்வாய்
சமத்து பிள்ளையாய் உனக்கான தாயின் அன்பை
நான் பெற்று கொள்வேன் அவள் மடியிலமர்ந்து

நோட்டு புத்தகத்தில் மயிலரிகை மறைத்து வைத்து
கூட்டு போடும் என தூங்காமல் நானிருந்த இரவுகள்
உனக்கும் தெரிந்திருக்கும்

அதனால் தானே
நீயே குட்டி மயிலிறகை என் புத்தகத்தில் வைத்து
அடுத்த நாள் நான் சந்தோஷத்தில் கூச்சிட்டும் நீ மௌனமாக
புன்னகைத்தாய் அண்ணா ..

மணமான நான் மறுவீடு செல்லும் நாள்
சந்தோஷமும் , சோகமும் கலந்து
அண்ணா ! உன் கண்ணின் ஓரத்தில் எட்டி பார்த்த
கண்ணீர் சொல்லும் உன் பாசத்தை

இவ்வுலகில் தாயின் பாசத்திற்கு இணை உண்டோ என்றால்
இணை இல்லை துணை உண்டு என்பேன் நான்

இன்று நீ  என் பிள்ளைகளுக்கு தாய் மாமன்
ஆனால்
என்றும் நீ என் அண்ணா !
அடுத்த பிறவியிலும் நீயே வேண்டும் என் அண்ணா !

Monday, November 20, 2017

வருவாயோ !

அழகான காலை
மேகம் மூடிய வானம்
முகம் காட்ட துடிக்கும் சூரியன்
தீடீரென இடி இடித்தது
அட எப்படி ?

விடை தந்தது அம்மாவின் குரல்,
காலையில் கனவு கண்டு படுக்காம
கல்லூரிக்கு கிளம்பு என்று

உன்னை காண போகிறேன்
என்று தெரியாமல் சென்றேன்
கல்லூரிக்கு
உன்னை நான் கண்ட முதல் நாள்

அழகான இசை எதுவென்றால் 
உன் கால் கொலுசின் ஒலி என்பேன் 

உன் கண் இமைக்கும் ஒவ்வொரு முறையும் 
என் உயிரும் சிறை கொள்ளுதடி 

காதல் ஒரு மாயை
வந்த நேரம் தெரிவதில்லை-அது
சொல்லிக்கொண்டும் வருவதில்லை

காதலுக்கு மூன்றெழுத்து 
அவளால்வந்த கவிதைக்கும்
மூன்றெழுத்து

பூ போல உன்னை தாங்குவேன் என 
உணர்த்த காதலுடன் பூச்செண்டு கொண்டு 
காத்திருக்கிறேன் 
பூச்செடியில்  முள்ளும் உண்டு என 
உணர்த்தி போவாளோ !?

உணர்வுகள்தான்
வாழ்வின் ஆதாரம் என்றால் 
உன் மேல் நான் கொண்ட 
காதல் உணர்வு தான் 
என் வாழ்வின் ஆதாரம் 

ஆணின் அன்பில்
மென்மை இல்லாமல்
இருக்காலம் ஆனால்
உண்மை இருக்கும்

பெண்ணின் அன்பில்
மெய்யும் இருக்கும்
தாய்மையும் இருக்கும்

காத்திருக்கிறேன், விடை சொல்
என்னை தாலாட்ட வருவாயோ!?
உன் காதல் சொல்ல வருவாயோ !?

Tuesday, November 7, 2017

உறவு !

செல்ல பிராணி ஒன்று வளர்த்தேன் -அதை
செல்லம் கொடுத்து வளர்த்தேன் 

செல்லும் இடமெல்லாம் அழைத்தேன் -அதை 
செல்ல பெயரிட்டு அழைத்தேன்

உண்ண உணவும் கொடுத்தேன் வளர வளர
உள்ளத்தில் அன்பும் கொடுத்தேன்

தனிமையின் தோழன் என நினைத்தேன்
உன்னை கண்டபின் என் எண்ணத்தை மறந்தேன்

உன்னுடன் விளையாடிய நாட்கள் நினைத்தேன்
என்றும் எண்ணத்தில் நினைத்து  மகிழ்ந்தேன்

விடுமுறையில் உன்னை பிரிந்தேன்  பாட்டி வீட்டில்  உன்னை
நினைத்து என்  கன்னத்தின் ஓரத்தில் அழுதேன்

மீண்டும் வீடு திரும்பியதும் உன்னை தேடினேன் -உன்னை
காணாமல் என் மனம் வாடினேன்

நீ தொலைந்ததாய் பெற்றோர் சொல்ல கேட்டேன்
சொன்னேன்
உனை காணாமல் இனி உணவு உன்ன மாட்டேன்

உனை தேடுவதாய் வாக்கு ஒன்று தந்தார்கள்
என்னுடன் வீதிக்கு தேடவும் வந்தார்கள்

என் மனம் போல் கதிரவனும் மறைந்தான்
வருண பகவானும் எனோ தேட உடன் வந்தான்

நினைத்தேன்  வருந்தினேன் குடை பிடித்து
விதியை நினைத்து வீதியின் ஓரத்தில் அமர்தேன்

தீடிர் என என் கையில் பழகிய முத்தம் , பழகிய ஸ்பரிசம்
உள்ளம் மகிழ்ந்தது உணர்வு புரிந்தது குடைக்குள் வந்தது

தொலைத்ததாய் நினைத்த உறவு
ஒரு குடையில் இருவரையும் இணைத்த
மழைக்கு நன்றி !

Saturday, October 21, 2017

பித்து !

பிடித்ததை எழுத யாரும் வேண்டாம்
பிடித்ததை பிடித்தது என்று சொல்ல
பிடித்தவர்கள் வேண்டும் போலும் !

படித்தவர்கள் படிக்காமல்
பிடித்தவருக்காக பதிகத்தை பிடித்தது எனும்போது
பித்துபிடித்தது போல் ஆகுவது என் மனம்

பின் பக்கமாய் ஏறி  யாரும் கோயிலில்
பிரார்த்தனை செய்வதுண்டோ நான் அறியேன்
பின்புத்தி கொண்டு யோசித்தேனானும்
பிறசொல் கேளாதவனானேன்

பிதற்றி கொண்டு எழுதினேனாயினும்
பித்து பிடிக்காமல் படித்தவர்க்கும்
படிக்காமல் பிடித்தது எண்ணுவோர்க்கும்

பித்து பிடித்தது என ஊர் சொன்னால்
பிரம்பெடுத்து என்னை அடிக்க வந்தால்
பிரடி தெறிக்க ஓட ஆயத்தமாவேன் !

தாத்தா !

தாத்தாவுக்கும் பேரனுக்கும் உள்ள
பந்தம் என்றும் தெவிட்டாத இன்பம்

பிறந்து வளர்ந்து படித்து மணமுடித்து
தந்தையாகி, வளர்த்து மணமுடித்து கொடுத்து
பேரனோ பேத்தியோ பிறக்கும் வேளையில்
மீண்டும் பிறக்கிறேன் குழந்தையாய்

பிறந்த குழந்தையை வளர்த்திடும் பொறுப்பு
என்றும்  பாட்டிக்கும், தாத்தாவுக்குமானது

கொஞ்சி மழலை மொழி பேசி விளையாடி
கால்ஊன்றி யானையாகி சுமந்து  நடந்து
வளர்த்தோம்

பள்ளி செல்லும் வேளை , காலை விட்டு வருவதும்
மாலை அழைத்து வருவதும் தாத்தாவிற்கான எழுதாத வேலை

அழைத்து வருகையில் பேரனுடன் கதை பேசி
நடந்து வருவது வார்த்தையில் விவரிக்க முடியா ஆனந்தம்

வளர்ந்து விட்டான் அவன் ,  கீச்சுகளையும் , முகபுத்தகத்தையும்
பார்த்து பார்த்து இன்று தாத்தாவின் முகம் மறந்திட்டான் போலும்

இதுதான் தலைமுறையின் இடைவெளியோ
இல்லை வயதானவர்களின் தலைவிதியோ
காலமோ காளனோ  பதில் சொல்ல காத்திருக்கிறேன்!!

Sunday, October 8, 2017

தீபாவளி

தீபஒளித்திருநாள்  வருகிறது 

பிள்ளையின் கட்டளை வந்தாயிற்று 
வேலைக்கு சென்று மாலை  வீடு திரும்பும் போது 
வாங்கிவரவேண்டும் உடன் பட்டாசு 

என் பல நாள் உழைப்பு சில வினாடிகளில் 
கரியாகும் என தெரிந்தும் வாங்க வேண்டும் 
பட்டாசு ..

தன் உடல் முழுவதும் மருந்து கலந்தாலும் 
தோல் நிறம் மாறினாலும் , தன் சந்ததி உரு குலைந்தாலும் 
தனக்கு தெரிந்த தொழில் என செய்யும் அவனக்காகவேனும் 
வாங்க வேண்டும் பட்டாசு ...

மனைவியின் புத்தாடை கனவுகள் 
வேண்டுகோளும் வந்தாயிற்று 
விடுமுறை நாளில் கடைகளில் ஏறி 
இறங்க வேண்டும் அவளுடன் 
மனைவிக்காகவேனும் வாங்க வேண்டும் புத்தாடை 

வீட்டில் சர்க்கரை நோயுடன் பெற்றோர் 
இருந்தாலும் , நமக்கு இனிப்பு பிடிக்கவில்லையென்றாலும் 
பக்கத்துக்கு வீட்டுக்கு கொடுக்கவேணும் செய்யவேண்டும் 
இனிப்பு பலகாரம் 

அசுரனை அழித்து மக்களின் வாழ்க்கையில் 
ஓளியேற்றிய என் கடவுள்-  இருளில் இருக்கும் 
என் வாழ்க்கையிலும் ஒளியேற்றுவார்  என்ற 
நம்பிக்கையில் ஏற்றவேண்டும் வீட்டில் 
"தீபஒளி"


"இருளை நீங்கி எல்லார் வாழ்க்கையிலும் 
ஒளி பிறக்க கொண்டாடுவோம் தீபாவளி "

Wednesday, October 4, 2017

பட்டம் !

சின்னஞ்சிறு வயதில்
துள்ளி திரிந்த பருவத்தில்
பறவை போல் வானில்
சிறகடித்து பறக்க ஆசை கொண்டேன்

ஒரு நாள் வானில் வண்ண வண்ண நிறங்களில்
புது புது வடிவங்களில் பறவைகள் போல்
பறக்கும் பட்டம் கண்டேன்

நூல் கொண்டு காற்றில் பறக்கும் பட்டத்தை
கட்டுபடுத்தும் அழகு கண்டேன்

அதை பிடிக்க ஆசை கொண்டு சிறிது நேரம் பிடிக்க
கேட்டேன் ஒரு அண்ணனிடம் தர மறுத்தார்
சிறுவன் நீ விட்டு விடுவாய் என

அப்பாவிடம் புது பட்டம் வாங்கி தர கேட்டேன்
திட்டு தான் வீழ்ந்தது ,

அம்மா கடைக்கு அனுப்ப
மிஞ்சும் சில்லறைதனை யானை உருவ
உண்டியலில் சேமித்து வைத்தேன்

உறங்காமல் அது நிரம்பும் வரை சில நாள் உறக்கமும்
தொலைத்தேன்

ஒருவழியாய் நிரம்பிய உண்டியலை உடைத்து
சில்லறைகளை எண்ணி பார்த்தால் சிறிது பணம் குறைந்தது,
தயங்கி தயங்கி அம்மாவிடம் கெஞ்சி மீதியை
வாங்கி ஓட்டம் எடுத்தோம் பட்டம் வாங்க

என்ன வண்ண பட்டம் வேணும் கடைகாரன் கேட்க
சிகப்பு வண்ணம் கேட்டு வாங்கி நூலும் வாங்கி
பட்டதில் என் பெயரும் எழுதி , நூல் கோர்த்து
பறக்க விட்டேன் வானுயர

என் ஆசைகள் தாங்கி பறந்தது வானில் என் பட்டம்
விளையாட்டிலும் உண்டல்லோ வஞ்சம்

வஞ்சம்தனை  மனதில் வைத்து நஞ்சுதனை  நூலில் தடவி
பட்டம் விட்டான் ஒருவன்

வானுயர்ந்த  என் பட்டம் அருகில் வந்தது அவன் பட்டம்
என் நூலை உரச என் நெஞ்சம் அறுந்தது, என் நூலை போல்,
என் பட்டம் திசை மாறி பறந்தது எங்கோ விழுந்தது

அறுந்து விழுந்த பட்டம்தனை பிடிக்க ஓடியது ஒரு
வாண்டுகள் கூட்டம்

பலநாள் ஆசை தேக்கி வைத்து வாங்கிய பட்டம்
ஒரே நாளில் வானில் பறந்து விழுந்தாலும்,
கல்லூரி பட்டம் வாங்கிய பிறகும் மனதில்
என்றும் பசுமையாய் பறந்து கொண்டுதானிருக்கிறது


Monday, September 25, 2017

ஆசிரியர் !

ஐந்து  வயதில் என்னை வளைத்து
அழியாத கல்வியினை புகட்டிய
என் முதல் ஆசிரியை இன்றும்
மனதில் நிற்கிறார்

விளையாட்டில் மோகம் கொண்டு
சுற்றி திரிந்த வயதில் அழுது அடம்பிடித்தும்
சேர்த்து விட்டனர் பள்ளியில்

அம்மையும் அப்பனும் தான் என்னை அறிவர்
அன்பு தருவார்கள் என எண்ணிய என்னை
தன் மார்மோடு அணைத்து கல்வி அமுதம்
ஊட்டியவர் என் ஆசிரியை

பிஞ்சு மனம் அதில் அறிவு நீர்பாய்ச்சி
கை பிடித்து என் தாய் மொழி அரிச்சுவடி
எழுத கற்று தந்தவள் என் ஆசிரியை

சாதி மதம் பாராமல் ஏற்ற தாழ்வு காட்டாமல்
எல்லோருக்கும் ஒரே போல போதிப்பவள் என் ஆசிரியை

பள்ளிக்கூடம் எனும் ஓர்  இடத்தில் நீ இருந்தும்
உன்னிடம் படித்து உலகை வலம் வருகிறோம்
நாங்கள் உன்னை சுற்றி

ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மாணவர்கள்
எல்லோரிடவும் ஒரே போல தான் இருக்கிறது
உன் அணுகுமுறை

கொடுக்க கொடுக்க பெருகும் ஒரே செல்வம்
கல்விச்செல்வம் கொடுத்து கொண்டே இருக்கிறார்
என் ஆசிரியர்

அளவு கடந்து எங்களின் விளையாட்டுக்கள்  எல்லை மீறும் போது
எங்களை நல்வழிப்படுத்த தண்டனையும் தருவாய்

பள்ளியின் கடைசி நாள் எல்லாரிடமும் ஒரு கேள்வி கேட்டீர்கள்
படித்து முடித்து என்னவாக ஆசை என்று ?
ஒவ்வொருவரும்  கை தூக்கி  ஒவ்வொன்று சொன்னோம்
எவரும் சொல்லவில்லை உங்களை போல் ஆசிரியர் ஆவேன் என்று !!

அன்று கனத்த இதயத்துடன் நீங்கள் வீடு சென்றீர்கள் ஆனால்
காரணம் அன்று புரியவில்லை எனக்கு

இன்று புரிகிறது எவ்வளவு மகத்துவம் மிகுந்தது உங்கள் பணி
என்று

மாத பிதா குரு மூவரும் வாழும் தெய்வங்களே !!

--- என் ஆசிரியர்கள் அனைவர்க்கும் சமர்ப்பணம் ---

Monday, September 18, 2017

கடல் அன்னையே

இரவுகள் பல சுகம் தரலாம்
பலருக்கு
இரவுகள் என்றும் நரகம் தான்
எனக்கு

எத்தனை பேர்களின் கவலைகள்
தீர்க்கும் கடல் நீ
என்னை போன்றோர்களின்
பசியையும் நீயே தீர்ப்பாய்

இன்று , என் கணவன் என்றும் போல்
வலை விரித்து மீன் பிடிக்க
புறப்பட்டான் உன்னிடம்

வைத்துக்கொண்டு வஞ்சம் செய்யாதவள் -நீ
பல நாள் எங்கள் பட்டினியை மறக்க செய்தவள் நீ

கடற்கரையில் மனிதர்களை பார்ப்பதாலோ என்னவோ
ஆர்ப்பரித்து சீறுவாய் நீ
உன் உண்மை குணம் நடுக்கடல் வந்து பார்த்தவருக்கு புரியும்
அமைதியின் இருப்பிடம் நீ என்று

எல்லைகள் உனக்கில்லை , உன்னில் எல்லைகளை
வகுத்தவனுக்கோ பகுத்தறிவுமில்லை

மீன் தேடி வலை விரித்து, இரவில்கடலில்  சென்ற என் கணவனுக்கோ
மீளா துயரத்தில் நான் விழுவேன் என்று நினைத்திருக்க வாய்ப்புமில்லை

வலை விரித்து காத்திருந்த நேரம் , எல்லை கடந்து வந்ததாய்
தாக்கியது துப்பாக்கி குண்டுகள் என் கணவனின் மார்பில்

உதவிக்கு யாருமில்லை என் கடல் அன்னையே
நீயே சரணம் என்று உன் மடியில் விழுந்தாரே !
அமைதியாய் என்றும் போல் இன்றும் உன் மடியில்
ஏற்றுக்கொண்டாய்

அவரின் சடலம் கூட நான் பார்க்கவில்லை
உன்னில் அவர் வாழ்வார் என்று நம்பிக்கையில்
இதோ நானும் வருகிறேன் உன் மடியில் விழுகிறேன்
என் கடல் அன்னையே !

Tuesday, September 5, 2017

அம்மா !

ஒன்றாய் தான் உருவானோம்
ஒன்றாய் தான் வளர்ந்தோம்
தாயின் கருவறையில்
  
ஒன்றுபோல் பாசம் காட்டினாள் தாய்
இரு மடங்கு உண்பாள் நமக்காக
இரவு பகல் தொலைத்தாள் நமக்காக
இருந்தும் இரு மடங்கு ஆனந்தம் கொண்டாள்

ஒரு பிள்ளை இல்லை என ஏங்குவோர் பலர்
இருக்க தனக்கு இரு பிள்ளை பிறக்க போவதை
எண்ணி இரு மடங்கு ஆனந்தம் கொண்டாள்

பிரசவம் நெருங்கும் நேரம் மருத்துவர்
நுட்பமாய்ச் சோதித்து பார்த்ததில்  ஒருவருக்கு ஊனம் 
என தெரிந்தது 

உன்னிடம் சொன்னாள் தாய்க்கும் சேய்க்கும் ஆபத்தாகலாம் 
என மறைத்தனர் தந்தை உட்பட 

எங்களுக்கு என்ன கவலை வெளியுலகம் காண
ஆவல் கொண்டு எட்டி உதைத்தோம் உன் வயிறில்

மருத்துவமனை அறுவை சிகிச்சை வாசல் வரை
தந்தை பின் உனக்கு துணை நாங்கள் மட்டும்

வலியின் உச்சம் தந்து, மரணத்தின் வாசல் தொட்டு பிறந்தோம்
சில நிமிட இடைவேளையில் பிறந்ததால் அண்ணன் தம்பி ஆனோம்
நாங்கள்

கண் திறந்து எங்களை பார்த்தாய் உன் கண்களின் ஆனந்தம்
குறையவில்லை

இதுவரை என் குறை நீ கண்டதில்லை
இதுவரை இரு வேறு முகம் காட்டியதில்லை
இதுவரை உன் அன்பு குறையவில்லை
இதுவரை என்னை வீழ அனுமதித்ததில்லை
இதுவரை எனக்கு நல்வழி காட்ட தவறியதில்லை

புரியாத புதிர்தான் நீ அம்மா
ஊனம் உடலிலோ கண்களிலோ அல்ல மனதில் என
உணர்த்தி கொண்டே இருக்கிறாய் உலகிற்கு

உன் அன்பிற்கு முன்னால்   ஊனம் கூட பலவீனம் ஆகிடும் அம்மா,
எப்பிறவியிலும் வேண்டும் நீயே
என் அம்மா !!

Saturday, September 2, 2017

***அனிதா மறைவு 01/09/2017***

இரவில்  என்னை தூங்க விடாமல் செய்த பெயர்
"அனிதா "

பெண் பிள்ளை என்றாலே கள்ளிப்பால் கொடுக்க
நினைக்கும் இச்சமூகத்தில்
கல்வி பால் கொடுத்து  வளர்த்தனர் உன் பெற்றோர்கள்

இன்னல்கள் பல கண்டும் தன் உடல் நலிந்தாலும்
நீ பிறர் உடல் நலம் காக்கும் மருத்துவராக வேண்டும்
என கனவு கண்டனர் உன் பெற்றோர்கள்

வசதி இல்லை வறுமையுண்டு துணை, இருந்தும்
கல்வியின்பால் கொண்ட உன் ஆர்வம் உயர்கல்வி
படிக்க தூண்டியது

மருத்துவர் படிப்பில் சேர வேண்டும் பணம் இல்லையேல்
மேல்நிலை பள்ளியில் நல்ல மதிப்பெண்கள்

இரண்டாவது எட்டுவது சாத்தியம்  என்று  1176/1200 எடுத்தாயிற்று
(நீட்) தடை (NEET ) உனக்கு புதியதல்ல இருந்தும் இது உன் உயிரை
குடிக்கும் என நீ அறியவில்லை

இத்தனை மதிப்பெண் எடுத்தும் நீ தேர்வாகவில்லை எனில் எத்தனை
உயரத்தில் இருக்கிறது நம் கல்வியின் தரம் ?

லட்சியம் மேல் கொண்ட உன் காதல் நீதியின் படியேற வைத்தது போராட
போராடி போராடி வாழ்க்கையே போராட்டமாய் போனதாலோ
உன்னை நீயே மாய்த்துக்கொண்டாய்

இறந்த பின்னும் சாதி பெயர் சொல்லி சண்டையிட அலைகிறது
ஒரு கூட்டம் உயிரோடிருக்கும் போது தண்ணீர் கொடுக்க கூட
முயலாத கூட்டம்

இனி ஒரு  உயிர் இழக்கும் முன் விழித்திடுமோ இச்சமூகம் ?

***அனிதா மறைவு 01/09/2017***

Tuesday, August 29, 2017

நட்பு

ஆயிரமாயிரம் கதைகள் பேசி
தினமும் கழித்தோம் நம் நாட்களை

உனக்கும் எனக்கும் இடையேயான
அன்பின் நெருக்கத்தை (காதலின்)விளிம்பில்
நின்று வேடிக்கை பார்க்கும் இவ்வுலகம்

ஆண் பெண் நட்பென்றால் இச்சமூகம்
மூன்றாம் கண் கொண்டே நோக்கும்

இட்டுக்கதை கட்டுக்கதையில் நம்மை  சேர்த்து
மாய வலை பின்னும் இவ்வுலகம்

பேசி பேசி களைத்தாயோ என்னவோ
இப்போதெல்லாம்  உன் பேச்சு குறைந்தது

மழை நின்ற போதிலும் தென்றல் தீண்டும்போது
தூரல் போடும்  சாலையோர மரங்களை போல

நாம் பேசுவது நின்ற போதிலும் தினமும்
நடக்கும் நிகழ்வுகளில் உன் தாக்கம்
வந்து வந்து போகிறது

Tuesday, August 22, 2017

பணம் !

பகல் இரவு நேரம் பாராமல்
பசி பட்டினி மறந்திருக்க
ஒவ்வொரு நாளும் உழைத்து
அந்த முப்பது நாளும் கடந்து
கையில் சம்பளம் கிடைக்கும் நாள்
விவரிக்க வார்த்தை இல்லை என்
ஆனந்தத்திற்கு ..

வீட்டில் காத்திருப்பாள் என் மனைவி
வீட்டுக்கு தேவையான பொருள்களின்
பட்டியிலிட்டு

பிள்ளை விரும்பி தினமும் நச்சரித்து கேட்டு
சம்பள நாள் வரை காத்திரு என்று சொன்ன
அவனுக்கு பிடித்த அந்த மிட்டாய் வாங்க வேண்டும்

அந்த இரவு சுகமான இரவு
சட்டைப்பையில் பணம்
கனவுகள் கூட வண்ணங்களில் வர கூடும்

பகல் விடிந்தது சேவல் கூவியது
உன் கனவு முடிந்தது என்று,
விழித்து எழுகையில் வாசலில்
ஓர் குரல் அது பால்காரனுடையது

அவனுக்கு கொடுக்க வேண்டிய பணம்
கொடுத்தாயிற்று , பின்னால் நின்றிந்தனர்
செய்தித்தாள் இடுபவன் , மளிகை கடைக்காரர் ,
அவசரத்துக்கு உதவிய பக்கத்துக்கு வீட்டு மாமி


மனைவி  சொன்னாள் மறந்துடாதீங்க பிள்ளையின்
இந்த மாத பள்ளி  தவணையை

சட்டைப்பையில் கை  நுழைத்து பார்க்கையில்
காற்று கூட அகப்படவில்லை

இன்னும் முப்பது நாள் கடத்த வேண்டும்
யாரிடமேனும் கடன் வாங்கி ....

யோசிக்கையில் விடியாமல் இருந்திருக்கலாம் நேற்றிரவு !!

Wednesday, August 16, 2017

காவியமா காதலா ?

ஒரு சில நொடி தோன்றிய
மின்னல் போல் தோன்றினாள்
அவள்

கதையில்லை , எழுத வரிகளும்
தோன்றவில்லை இருந்தும் ஓராயிரம்
காவியம் சொன்னது உன் புன்னகை

மென்மையான ஓவியம் நீ
மணலில் வரைந்த ஓவியம் அல்ல !
என் மனதில் பதிந்த இனிமையான காவியம் !

ரோமியோ ஜூலியட் , அம்பிகாபதி அமராவதி 
காவியமான காதல் எல்லாம் மரணத்தில் தான்
முடியுமென்றால் எனக்கு காவிய காதல் வேண்டாம்

உன்னோடு நான் வாழ வேண்டும் பல ஆண்டுகள்
சின்ன சின்ன செல்ல சண்டைகள் இட  வேண்டும்
கொஞ்சி பேசி வளர்த்திட ஓர் குழந்தை
கொலுசு அணிந்து ஓடி விளையாட ஒரு வீடு

அம்மா செல்லமா அப்பா செல்லமா என்று கேட்க
இருவரையும் கட்டி அணைத்து முத்தமிடும் குழந்தை

நம் பிள்ளை படித்து வளர்ந்து அவனும் மணமுடித்து
பேர பிள்ளைகள் பெற்று அதனையும் கொஞ்சி

துன்பங்கள் வந்தாலும் தேற்றி தோள் கொடுத்து
வாழ்வின் இறுதியிலும் என் விரல் இடுக்கில்
உன் விரல் கோர்த்து அந்திமாலை பொழுதில்
வீதியில் நடக்க வேண்டும்

ஈரேழு ஜென்மம் வேண்டாம்
இனி ஒரு பிறவியும் வேண்டாம்
நிறைவாய் உன்னுடன் ஓர் வாழ்க்கை
காவியமாய் இல்லையெனினும்
காதலுடன் வாழ வேண்டும் ...

Saturday, August 5, 2017

அம்மாவின் பொய்

நிலாவை காட்டி
அது மலை மீது ஏறி மல்லிகை பூ கொண்டுவரும் என
சோறு ஊட்டியபோது சொன்னாள் பொய் ...

பொய் சொன்னால் சாமி கண்ணை குத்தும் என நான்
பொய் சொல்லாமல் இருக்க  சொன்னாள் பொய்...

எனக்கு பிடிக்கும் என்ற காரணத்தால் தனது பங்கையும்
சாப்பிடாமல் எனக்கு தருவாள் ..காரணம் கேட்டால்
பசிக்கவில்லை, பிடிக்கவில்லை என சொன்னாள் பொய் ...

ஏதாவது நினைத்து வருந்தி அழுவாள் கேட்டால்
கண்ணை துடைத்து சிரித்து ஒண்ணுமில்லை
என சொன்னாள் பொய் ...

கவிதையின் உவமையில் பொய் அழகு என்றால்
நிஜமான அன்பில் என் தாய் சொன்ன பொய்யும்
அழகு தான் ..

Tuesday, August 1, 2017

காத்திருக்கிறேன் !

என் மன எண்ணங்களை
பகிர்ந்துகொள்ள ஓர் உறவு

என் சந்தோஷ தருணங்களை
என்னுடன் கொண்டாட ஓர் உறவு

துக்கமான சமயங்களில் என் கண்ணீர்
எட்டி பார்க்கும் சமயத்தில் என்னை ஆறுதல்
படுத்த ஓர் தோள்

வாழ்வில் விழும் நேரத்தில் விழாமல்
காப்பாற்ற ஓர் கை ..

ரகசியங்களை பகிர்ந்து கொள்ள ஒரு உறவு
நம்மிடையே மனம் கசந்த சமயத்திலும்
ரகசியம் கசியாமல் காப்பாற்றும் அந்த உறவு

வார்த்தைகள் கொண்டு பேசாவிடினும்
என் மௌனத்தின் மொழி அறிந்த ஓர் உறவு

அது காதலியாக வேண்டாம்
ஒரு நல்ல தோழனோ தோழியாகவோ
கிடைக்க
காத்திருக்கிறேன்


FTC

முதல் நாள்
தயக்கத்துடன் தான் எட்டி பார்த்தேன் எனினும்
ஈர்த்து விட்டது என்னை தன் வளையத்தினுள்

பொழுது போகாமல் தான் உள்  நுழைந்தேன்
அன்று
பொழுது விடிந்தால் வர தோன்றுகிறது இங்கு
இன்று

புதியவன் என்ற எண்ணம் யார் மனதிலும்
இருப்பதாய் நான் அறியவில்லை
நட்பாய் இருக்க பல காலம் பழகிய அனுபவம்
தேவையுமில்லை

ஆறு வருடம் ஆணிவேராய் கால் பதித்த
நாட்கள் எத்தனை நட்புக்கள் , காதல்கள்
மோதல்கள் , துக்கங்கள், சங்கடங்கள்
சந்தோஷங்கள் கடந்திருக்கும்

ஒவ்வொரு விழாவிற்கும் விழா எடுத்து
கொண்டாடிய தருணங்கள்

பிறந்த நாளில் பிறந்தவரை பற்றிய
நட்புக்களின் குரல்களில் அவர்களின்
எண்ணங்கள்

பட்டிமன்றம் , விவாதங்கள் போட்டிகள்
எத்தனை எத்தனை நிகழிச்சிகள்

விளம்பரம் இல்லாமல் விரும்பியவர்கள்
பங்குபெற நடக்கிறது ....

ஆறுவருடம் ஆகாயம் எட்டும் பண்பலை
 ஆனந்தமே
எல்லைகள் இல்லா இணையம்
இணைந்திருப்போம் அறுநூறு ஆண்டுகள்
ஆனாலும்

வாழ்க வாழ்க வாழ்க என வாழ்த்துவோமே !!!

Wednesday, July 26, 2017

அவள் நினைவுகள் !

தனியாக பெய்து கொண்டிருக்கிறது
மழை
ஆனால் என்னுடனோ அவள் நினைவுகள்

என் எல்லா பொழுதையும் ஆக்கிரமித்து கொள்கிறாள்
காலையில் தொடங்கும்  குறுஞ்செய்தி முதல் ..

கல்லூரி செல்லும் பேருந்து வந்ததும் தொடங்கும்
உன் புன்னகையுடன்

கல்லூரி வரும் வரை நாம் பேசிய பேச்சுக்கள் ஏராளம்
உணவு இடைவேளை நமக்கு இணைந்து பேச கிடைக்கும் வேளை

ஒன்றாய் அமர்ந்து  பகிர்ந்துண்ட நாட்கள்
இனியும் வாழ்வில் அமையும் என்று எண்ணிய நாட்கள்

மாலையில் தேநீர் குடித்து  இருள் நம்மை சூழும் வரை
பேசி பேசி பிரிவோம் வீடு செல்ல .. அது நிரந்தரம் ஆகும் என
அறியேன் அன்று

மொட்டைமாடியில் நிலவினை கண்டு குறுஞ்செய்தி
துணை கொண்டு பேச மறந்து போனதாய் சொல்லி
பேசினோம் பேசினோம் ..தெரியவில்லை அன்று எனக்கு
அது நிரந்தரம் ஆகாது என

கனவிலும் தொடரும் நம் சந்திப்பு அன்று நாம்
பேசிய திட்டங்கள் யாவும் கற்பனை கொண்டேன்

அது என்றும் கனவாகவே இருக்கும் என  அறிந்திருக்கவில்லை நான்

என்னை உன்னில் இருந்து பிரிக்க காலன் அவன் முடிவு கொண்டிருந்ததை நான் அறிந்திருந்தால் என் உயிரை கொடுத்திருப்பேன் எமனுக்கு

பார்க்கும் இடம் எல்லாம் உன் முகம்
கேட்கும் இசை எல்லாம் உன் குரல்
உண்ணும் உணவிலும் உன் சுவை
காற்றின் பரிசத்தில் உன் நினைவு

எல்லாமுமாக நீ இருக்கிறாய்
நான் இன்று நீயாக இருக்கிறேன்

உடம்பில்  உயிர் கொண்டு பலனில்லை
என் உயிர் கொன்று வருகிறேன் உன்னை தேடி

Monday, July 24, 2017

மரம் !

குழந்தையாய் பிறந்து முதியவராய் 
மடியும் இடைப்பட்ட காலம் தான் 
வாழ்க்கை 

துளிர்விடும் இலை  பார்க்க அழகு ,
பாலூட்டி வளரும் குழந்தை 
நீர் ஊற்றி வளரும் இலை 

படிப்பு , வேலை காதல் , உறவு 
சங்கடங்கள் ஏராளம் நமக்கு 
வெயில், புயல்,  சூறாவளி காற்று 
சங்கடங்கள் இலைக்கும் உண்டு 

நீர் ஊற்ற நாம் தவறினாலும் 
காற்றும், நிழலும் தர அது 
மறப்பதில்லை மறுப்பதும் இல்லை 

இலையுதிர் காலம் உனக்கு 
முதியவர்கள் புதியவர்களுக்கு 
வழி விடும் நேரம் 
ஆம் புது உயிர் துளிர் விடும் நேரம் 

உன்னை பற்றி நாங்கள் அதிகம் கவலை 
படுவதில்லை 

மழையின் உதவியால் துளிர்விட்டு 
செடியாகி , மரமாகி , காய், கனி நீ தந்தாலும் 
வெயிலில் நீ நின்று  இளைப்பாற நிழல் 
நீ தந்தாலும் 
நாங்கள்  சுவாசிக்க காற்று நீ தந்தாலும் 

உன்னை அழித்து ஒரு ஆடம்பர வீடு கட்டவே 
நினைக்கும் மனிதர்கள்  நாங்கள் 

வளர்த்த தாய் தந்தையை வயதானதும் 
போற்றி பாதுகாக்காமல் 
முதியோர் இல்லம் அனுப்பும்
மனிதர்களிடம்என்ன எதிர்பார்ப்பது 

உண்ட பழத்தின் எச்சத்தை விதையாக விதைக்கும்
காக்கை குருவிகளின் அறிவு 
மனித நமக்கு இல்லாமல் போனதே !

சுவாசிக்க காற்று இல்லாமல் 
மரணம் உன்னை நெருங்கும் முன் 
விழித்திடுவோம் மனிதா !
வீட்டுக்கு ஒரு செடியேனும் 
வளர்ப்போம் நாளை நம் சந்ததி 
செழித்து வளர்ந்திட 
வா மனிதா !!!

Thursday, July 20, 2017

முதல்காதல்தான்!

சந்தோஷமோ, சோகமோ சரியோ, தவறோ என்னுடைய வாழ்க்கையில் என் முடிவுகளே முடிவாக இருக்கட்டும்
என்றாய்

மண்ணில் புதையும் வரை வடுவோடும்.. வலியோடும்.. முடிந்து போகும் வார்த்தைகள்


வாழ்க்கையில் அனுபவம் ஆயிரம் கற்றுத் தந்தாலும்

முற்றுப்புள்ளி இல்லாமல் கேள்விகள் மட்டும் மனதிற்குள் ஏராளம்...

எதற்க்காக இந்த முடிவு ?


என் அறியாமையின் ஏமாற்றத்தால்

உன் பிரிவை தாங்கிக்கொள்ளும் சக்தியில்லை 

புரிந்து விட்டால் உன்னை பிரிய அனுமதித்திருக்கமாட்டேன்

மறந்து விட நினைத்தாலும்
மறக்க முடியாமல் தவிப்பது என்னவோ வாழ்வின் முதல்காதல்தான்!


Tuesday, July 18, 2017

ஒரு நாள் வாழ்க்கை !

அழகான காலை
அம்மாவின் கையில் தேநீர்
அன்போட எழுப்பி  கொடுத்து விட்டு
சென்றாள்

காக்கைகளின் ரீங்காரம்
ஆம் குயிலும் சிட்டுக்குருவிகளும்
மறைந்து விட்டன நம் விஞ்ஞான வளர்ச்சியை 
கண்டு இப்போது காக்கை மட்டும் துணை உண்டு 

அப்பாவின் அர்ச்சனை தொடங்கி விட்டது
நேரம் ஆகிறது சீக்கிரம் கிளம்பி செல் என

பேருந்தில் ஏறி அலுவலகம் சென்றால்
எனக்காய் எடுத்து வைத்த வேலைகள்
மூழ்கினேன் அதில்

பசி மறந்து நானிருக்க இடை இடையில் அதிகாரியின் திட்டுக்கள் வேறு
தீவிரம் காட்டி முடிக்கையில் நியாபகம் வந்தது
ஒலியின்றி இருக்க செய்த என் தொலைபேசி

எடுத்து பார்க்கையில் அவளிடமிருந்து வந்த அழைப்பை
எடுக்காமல் விட்ட எண்ணிக்கை பத்து
குறுந்செய்தி சொல்லியது இன்று அவள் பிறந்த நாள்
வாழ்த்த  மறந்ததால் உறவு முறிந்தது என

அவளை சொல்லி என்ன குற்றம்
அதிகாரியை சொல்லி என்ன குற்றம்

தலை மேல் கை வைத்து சிறிது உட்கார்ந்தேன்
அலுவலக படிகளில் வீடு செல்ல பிடிக்காமல்

சிறிது கழித்து நடந்து பேருந்தில் ஏறினேன்

ஒருவழியாய் கடைசி இருக்கை இருந்தது 

பயணம் தொடங்க சொல்லி தந்தது வாழ்க்கை பாடம் 

"பேருந்தின் கடைசி இருக்கை போல தான் 
வாழ்க்கை திடீர் திடீர் என்று 
தூக்கி தூக்கி அடிக்கும் "

இதுவும் கடந்து போகும் 

Tuesday, June 27, 2017

தோழி!

மல்லி மலரும் அதிகாலை..
அல்லி மலரும் அந்திவேளை...
இடைப் பட்ட அந்த நேரம்.
நம் சந்திப்பு நடை பெற்ற நேரம்

எத்தனை உறவுகள்
தேடாமல் கிடைத்திருந்தாலும்
தேடிக்கிடைத்த உன்னை
விட்டு செல்ல விரும்பவில்லை
பிரிந்து செல்ல பிடிக்கவில்லை

உன்னைப் போல் ஒரு உறவு
தேடினாலும் கிடைக்காது

நான் ஆண், நீ பெண் என்பதால்
ஊர் சொல்லும் ஓராயிரம் உறவுகள்
நம்மைபற்றி

என்னை பற்றி நீ சிந்திப்பாய் அதிகமாய்
என் கவலையும் சந்தோஷமும் உன்னையும்
தொற்றிக்கொள்ளும் நான் சொல்லாமலே

நம்மை பற்றி ஊர் சொல்லுவது நமக்கு
கவலை இல்லை இருந்தும் உன் எதிர்காலம்
என்னை கவலை கொள்ள செய்கிறது

என்னால் அது சிதைந்தால் தாங்கும் சக்தி எனக்கில்லை
ஆதாலால் சரியோ தவறோ இந்த முடிவு
உன்னை விட்டு விலகி இருக்க

என் நண்பர்களின் பெயரில் என்றும்
முதலில் உன் பெயர் தான் இருக்கும்
என் அன்பு தோழியே !


Monday, June 26, 2017

பணமே !!

உன்னை தேடியே இங்கு பலரின் பயணம்

நீ மட்டும் இல்லை என்றால் பலருக்கு
போராடும் குணம் கூட இல்லாமல் போயிருப்பான்

உனக்கு எல்லாரையும் பிடிக்கும் தான்
ஆனால் உன்னை மட்டும் பிடித்தவருக்கு தான்
யாரையும் பிடிக்காமல் போகிறது

குற்றம் செய்தவன் நீ என்று ஊர் பழி  சொல்லும் உன்மேல்
குற்றமற்றவனாய் நடப்பான் மனிதன் பழி உன் மேல் போட்டு

உனக்கு நண்பன் யார் தெரியாது உனக்கு உறவு யார் தெரியாது
ஆனால் நீ உடன் இருந்தால் தான் இவை இருப்பது அவனுக்கு
தெரிகிறது

இவ்வுலகில்
உன்னால் வாழ்ந்தவர் கதை சொல்லும் கதைகள் ஏராளம்
உன்னால் வீழ்ந்தவர் கதை சொல்லும் கதைகள் தாராளம்

உறவுகள் தொலைத்து நண்பர்கள் தொலைத்து
உணவை தொலைத்து வாழ்வை தொலைத்து
உன்னை தேடி ஒடி சேர்த்தேன் உனை என்னிடம் ...

உடன் வந்தது அழையா விருந்தாளியாய் நீரிழிவு ,
ரத்த அழுத்தம் , நிம்மதியின்மை , தூக்கம் இல்லா இரவுகள்
இருந்தும்

கடைசியில் மரணம் அழைக்கையில் புதைக்கவோ
எரிக்கவோ நீ அருகில் இல்லையெனில்
அநாதை பிணமாய் சைவ அறையில் மூலையில்
ஈக்கள்  மொய்க்க படுத்திருப்பேன் ...

அளவோடு இல்லையெனில் அமிர்தமும் நஞ்சு தான்
அளவோடு உன்னை அணைக்க ஓடுகிறேன்
வா பணமே !!


















Thursday, June 22, 2017

மலர்

இன்று பூக்கும் மலர் போல நான்
மொட்டாய் இருக்கையில்
யோசித்ததுண்டு எங்கு செல்வேன் நான் என்று

கோவிலில் அனைவரும் வணங்கும்
கடவுளின் கழுத்தில் மாலையாகவா ?

இல்லை கோவிலின் வெளியில் நிற்கும்
வண்டிகளின் முன் அலங்கார பொருளாகவா ?

இல்லை அழகானே பெண்ணின் கூந்தலிலா ?
இல்லை அன்பான அம்மா அவள் பிள்ளையின்
தலை வாரி பூச்சூட போகிறாளோ ?

இல்லை பணி காலம் முடிந்து பிரியா விடை
பெறும் அவரின் கழுத்திலா ? இல்லை
உயிர் பிரிந்து கிடக்கும் ஒருவரின் சடலத்திலா ?

யோசித்து யோசித்து பூவாய் பூத்தும் பறிக்க படாமல்
கருகி போனேன் முதிர் கன்னிபோல்


மலர்













Friday, June 16, 2017

பணமே!

பிறக்கவும் பிறந்த பின் வாழவும்
வாழ்ந்த நாளில் சாகாமல் இருக்கவும் ,
நீ தேவை

இறந்தபின்னும் உன் தேவை இருக்கத்தான்
செய்கிறது

ஜாதி, மதம், ஆண் ,பெண் பேதம்
உன்னில் நான் கண்டதில்லை

சுத்தம் உனக்கு ஒரு பொருட்டல்ல
கோவிலில் கடவுளின் மடியிலும்
நீ இருப்பாய்

குப்பை அள்ளுபவரின் கையிலும் நீ
தவழ்வாய்
வேறுபாடு உன்னில் நான்
கண்டதில்லை

மனிதனின்  வெற்றியும் தோல்வியும்
உன்னை வைத்தே
தீர்மானிக்கிறார்கள்

உன்னை போதும் என்று சொல்பவர்
தேடினாலும் இம்மண்ணில் காண்பது
அரிது

உன்னால் உறவை தொலைத்தோர் பலர் 
உன்னால் உயிரை தொலைத்தவர் பலர் 
இருந்தும் நீ உடன் இருந்தால் மகிழ்வர் 


மூன்றேழுத்தை தேடி மூச்சிரைக்க 

ஓடுகிறேன் எங்கிருக்கிறாய்  நீ 
பணமே! 

Tuesday, June 13, 2017

அண்ணன் !

வெவ்வேறு நாளில் தான் பிறந்தோம்

எனக்குமுன் பிறந்து என் வருகைக்காக
காத்திருந்தவன் நீ

பள்ளிப்பருவம் அதில் சிறகடித்து பறந்தோம் நாம்

மயில் இறகை நோட்டுக்குள் வைத்து அது குட்டி போடும் என
என்னை நம்ப வைத்து நான் உறங்காமல் காத்திருக்க

மறுநாள் எனக்கு தெரியாமல் நான் ஏமாற கூடாதென
அதில் இன்னொமொரு மயிலிறகை வைத்தவன் நீ

வெட்டிப் போட்ட நுங்கை வைத்து வண்டியோட்ட
சொல்லி தந்தவன் நீ

நீ படித்த புத்தகம் அதனை நான் படிக்க
பாதுகாத்து தந்தவன் நீ

பெற்றோர் இல்லா வேளைகளில்
என்னை பார்த்துக்கொண்டவன் நீ

நொண்டி, கிட்டிப்புள், பம்பரம், கண்ணாம்பூச்சி, கோலி
என பல விளையாட்டுகள் சொல்லி தந்தவன் நீ

மண் குழப்பி வீடு கட்டி விளையாடி
அதில் நாம் நம் உறவினர்களுடன் வசிக்க
சொல்லித்தந்தவன் நீ

சைக்கிளில் கால் எட்டாத போதும் குரங்கு பெடல்
ஓட்ட கற்றுத்தந்தவன் நீ

ஒவ்வொரு தோல்வியையும் எனக்கு
பாடமாக கற்பித்தவன் நீ

புது கைபேசி வந்தததும் அதை எனக்கு
தந்து அழகு பார்த்தவன் நீ

வீட்டினில் நான் செய்த குறும்பினால்
பெற்றோரிடம் அதிகம் திட்டு வாங்கியவன் நீ

எனக்கு எல்லாமாகவும் இருப்பவன் நீ
அடுத்த பிறவியிலும் வேண்டும்
எனக்கு அண்ணனாக நீ !!

Saturday, June 10, 2017

தாய்மை

உன்னை போல் பட்டாம்பூச்சியாய்
பறந்தவள் தான் நானும்

கல்லூரி முடிந்ததும் கல்யாணம்,
பறந்தவள்  சிறை பிடிக்க பட்டேன்

கல்யாணம் முடிந்து ஓரிரு ஆண்டுகள்
கடந்தும் வயிற்றில் நீ வராததால்

வந்தவர்கள் வாயில் நான் அவல்
ஆனேன் ...

எத்தனை பேச்சுகள் அவதூறுகள்
நான் அறியா வார்த்தைகள்
அறிந்து கொண்டேன் அருவருப்பு கொண்டேன்

யார் குற்றம் ? அறியவில்லை எனில்
அது பெண் குற்றம் என கொள்ளும் இச்சமூகம்

மருத்துவ வளரச்சியில் என்
வயிற்றில் நீ வளர்ந்தாய்

கடவுள் வரமென ஊர் சொல்லியது
கடவுளே வரமாக வந்ததாக நான் எண்ணினேன்

நீ பிறக்கும் முன் கருவில் நீ இருக்க
உறக்கம் தொலைத்தேன்

பெண்ணாக நீ பிறந்ததால் உறவை
தொலைத்தேன்

கள்ளிபாலா இல்லை தாய்பாலா என
உறவு கேட்டது ..

கடவுளை இழக்க மனமில்லை
உறவை இழக்க துணிந்தேன்

உன்னை வளர்த்த இந்த இருபது
வருடம் தூக்கம் பல தொலைத்தேன்
ஆனாலும் அவையாவும் ரசித்தேன்
சகித்தேன்

இன்று இருபது நொடியில் பூத்த
காதலுக்காக  என்னை மறக்க
நீ துணிந்தாய்

யார் குற்றம் இது ? இன்றும் தெரியவில்லை
உன்னை எதிர்க்க திராணியில்லை
கள்ளிப்பால் குடிக்க துணிந்தேன்

இன்றும்
கடவுளை இழக்க மனமில்லை
உயிரை  இழக்க துணிந்தேன்


அடுத்த பிறவியிலும் பெண்ணாகவே
பிறப்பேன் உன்னை சுமந்த சுகம்
மீண்டும் பெற ...

Tuesday, June 6, 2017

ரகசியம்

எல்லாரும் காக்கிறோம் ரகசியம்

வெளிப்படுவது ரகசியத்தை பொறுத்தது

பெண் தன் முதல் காதலை தன் கணவனிடம்
சொல்வதில்லை

பெண் தன் பசியை சொல்வதில்லை
தனக்கான உணவை தன் பிள்ளை
உண்கையில்

அவள் வீட்டு சமையல் அறை
பாத்திரம் சொல்லும்
ரகசியமாய் சேர்த்து வைத்த
பணத்தின் அருமையை

365 நாளும் உனக்காய் ஓய்வின்றி
உழைப்பாள் உன்னிடம் தன் வலியை
உன்னிடமிருந்து மறைப்பாள்

உண்மையை மறைப்பதும் ரகசியமே

இவை உனக்கு புரியும் போது
அவள் உன்னுடன் இருப்பதில்லை


யார் இவள்

யார் இவள்
வானத்து தேவதையோ
வானவில்லின் பொன்மகளோ

மயிலிறகின் ஸ்பரிசம்தனை
மறக்காமல் தந்திடுபவளோ

முன்காலை சூரியனின் பினாமியோ
சாயங்கால சூரியனின் சகோதரியோ

நிலவின் ஒளி தந்த நீ அவள் தோழியோ
இல்லை
அந்த நிலவே நீ தானோ ?

அழகின் அட்சயபாத்திரமோ ?
அவள் மேல் கொண்ட மோகத்தை கரைக்கும்
இவள் ஆகாய தாமரை யோ ?

காலையில் கண்விழித்து பார்க்கும்
உள்ளங்கை குறுந்செய்தியோ ?
கவிகள் வார்த்தை தேடி திண்டாடும்
அழகின் பிரபஞ்சமோ ?

அழகான ஓவியமோ இல்லை
எதிலும் எழுதாத காவியமோ ?

ஆர்ப்பரிக்கும் கடல் அலையோ
இல்லை அமைதியின் இமயமோ ?

முட்கள் கொண்ட மலரோ
இல்லை
முத்தத்தின் கொள்முதல் நிலையமோ ?

யார் இவள் விடை தெரிய காத்திருக்கிறேன் ..


Sunday, June 4, 2017

காதலை

காதல் விளையாட்டாய் தான்
தொடங்கியது எனக்கு

உன்னுடன் பேச முடியுமோ என

என் நண்பன் கட்டிய பந்தயம் தான்
உன்னுடன் நான் பேச காரணம்

காரணமின்றி பேசினேன் உன்னுடன்

ஆனால்
உன் கண்கள் சொல்லியது
ஆயிரம் காரணங்கள் நான் தினமும்
உன்னுடன் பேச ...

என் மௌனம் களைத்தேன் உன் ஓர விழி பார்வை என்னை தாக்கியபோது


காதல் எனும் போட்டியில் கலந்துகொண்டேன் உன் அழகிய நெற்றியில் என் கைகளால் வண்ணக்கோலமிட


எனக்கு உன்னுடன் அப்படி வாழனும் இப்படி வாழனும்னு ஆசை இல்லை,

அன்பே உன்கூட வாழனும் உனக்காக வாழனும் அவ்வளவே !

அழகை பார்த்தே முதலில் காதல் வந்தது அழகிடம் தோற்றுப்போயே நம் காதல் நிலைத்தது



தடைகள் எது வந்தாலும் தகர்ப்போம்

சுகமாக சுமப்போம் நம் காதலை
வாழும் காலம் முழுவதும்